உலகப் புத்தக நாள்





இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும்க்கும் தாம் வாழும் சூழலிலிருந்து தமது இயல்பான அறிவைப் பெறுகின்றனர்; தாம் விரும்புகிற, தமக்குத் தேவையான அறிவை பிறரிடமிருந்து பெறுகின்றனர். அவ்வாறு பெறுவதற்குப் புத்தகங்கள் பெரிதும் துணைநிற்கின்றன. இங்ஙனம் அவர்கள் பெற்ற இயல்பறிவும் புத்தக அறிவும் அவர்களை இக்காட்டுகளிலிருந்து காக்கின்றன. எனவேதான், மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்  யாவுள முன்நிற் பவைஎன்கிறது குறள்.  எனவேதான், அறிவைப் பரப்புவதில் ஆற்றல்மிகு காரணியாகவும் அதனைப் பாதுகாப்பதில் திறன்மிகு கருவியாகவும் புத்தகம் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறதுஎன்று கூறி ஏப்ரல் 23ஆம் நாளைஉலகப் புத்தக நாளும் காப்புரிமை நாளும்” (World Book and Copyright Day) என்று அறிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (UNESCO).  1995ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் முதல் நவம்பர் 16ஆம் நாள் வரை ஃபிரான்சு  (France) நாட்டின் தலைநகரான பாரிசு (Paris) நகரில் நடைபெற்ற இந்த அமைப்பின்  28ஆவது மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.  1616ஆம் ஆண்டின் இதே ஏப்ரல் 23ஆம் நாளில்தான் உலகப்புகழ்பெற்ற படைப்புகளை வழங்கிய இன்கா கார்சிலோசோ டி லா வேகா (Inca Garcilaso de la Vega 12.04.1539–23.04. 1616), மிகுவல் டி செர்லாண்டசு (Miguel de Cervantes 29.04.1547– 2.04.1616) என்கிற இரண்டு ஃசுபானிய (Spanish) எழுத்தாளர்களும் வில்லியம் சேசுபியர் (William Shakespeare 26.04.1564–23.04.1616) என்கிற ஆங்கிலப் பாவலரும் மரணமடைந்தனர் என்பதையும் அந்த அறிக்கை நினைவுகூர்ந்தது.


கார்சிலோசோ டி லா வேகா
வில்லியம் சேசுபியர்
மிகுவல் டி செர்லாண்டசு

புத்தகம் கல்விசார்ந்த அறிவைப் பரப்புவதோடு, உலகம் முழுவதுமுள்ள வெவ்வேறு பாண்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வையும் வழங்குகிறது. அதனால் ஒரு புத்தகமானது தன்னைப் படிக்கும் ஒருவரின் நடத்தையில் புரிதல் (Understanding), பொறுத்தல் (Tolerance), உரையாடல் (Dialogue) ஆகியவற்றின் வழியாக தனது செல்வாக்கைச் செலுத்துகிறது.  எனவே, புத்தகம் படித்தலையும் பரப்புதலையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடுஉலகப் புத்தக நாள்அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அந்நாளில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகளில் புத்தக அறிமுகக்காட்சியும் புத்தக விற்பனைக்காட்சிகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இங்ஙனம்  உலகப் புத்தக நாளை ஐகஅபஅமைப்பு (UESCO) அறிவிப்பதற்கு முன்னரே ஃசுபெயின் நாட்டில், ஏப்ரல் 23ஆம் நாள் புத்தக நாளாக 1926ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. பாலசுதீனியா போர்வீரான சார்சு (George) கிறித்துவத்தைப் பின்பற்றியதால் கி.பி.303 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் கொல்லப்பட்டார். எனவே, அவரை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அந்நாளை தூய சார்சு நாளாக (Saint George Day) கிறித்துவர்கள் பலர் கடைபிடிப்பர்.  அந்நாளில் அன்பர்களும் காதலர்களும் உடன்பணியாற்றுபவர்களும் தமது அன்பின் அடையாளமாக இரோசா மலர்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.  அதனைக் கண்ட, ஃசுபெயின்  நாட்டிலுள்ள பார்சிலோனா நகரைச் சேர்ந்த வணிகர் ஒருவர், “‘இரோசா அன்பின் அடையாளம்; புத்தகம் அறிவின் அடையாளம்’; எனவே பெண்கள் இரோசா மலர்களையும் ஆண்கள் புத்தகங்களையும் பரிசளியுங்கள்என்று 1923ஆம் ஆண்டில் வேண்டினார். அன்பும் அறிவும் இணைக்கப்பட்டதால் அக்கருத்து பலரையும் கவர்ந்தது; புத்தகங்கள் ஒவ்வோராண்டும் பரிமாறப்பட்டன. அதன் விளைவாக 1926ஆம் ஆண்டு முதல் ஃசுபெயின் நாட்டில் அந்நாள், இரோசா நாள் என்றும் புத்தக நாள் என்றும் அழைக்கப்பட்டது.  இங்ஙனம் ஒரு வணிகரின் சிந்தனையில் தோன்றிய புத்தக நாள், இன்று உலகு தழுவிய நாளாக விரிந்திருந்திருக்கிறது.




ஆனால், ஏப்ரல் 23ஆம் நாளை இங்கிலாந்தும் அயர்லாந்தும் புத்தக நாளாகக் கடைபிடிக்கப்பதில்லை. அந்நாள், தூய சார்சு நாளாகவும் ஈசுடர் விடுமுறைக் காலத்தில் அமைந்திருப்பதுமே அதற்குக் காரணம். மாறாக, 1998ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதத்தின் முதல் வியாழக்கிழமை அங்கு புத்தக நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.  1998 மார்ச்சு 5ஆம் நாள் இலண்டன் நகரிலுள்ள குலோப்பு அரங்கில் (Globe Theatre) இங்கிலாந்துஅயர்லாந்தின் புத்தக நாளை அந்நாட்டின் அந்நாளைய தலைமையமைச்சர் தோனிபிளேயர் அறிவித்தார். அப்பொழுது இங்கிலாந்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பவுண்டும் அயர்லாந்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் 1.50 ஈரோவும் வழங்கப்பட்டன. அவர்கள் அப்பணத்தைக்கொண்டு தாம் விருப்பும் புத்தகங்களைக் கடையில் வாங்கிக்கொள்ள ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. எனினும் உலகமே கடைபிடிக்கும் புத்தக நாளைப் புறக்கணிக்க விரும்பாதஇரீடிங் ஏசென்சி’ (Reading Agency) என்னும் இங்கிலாந்திலுள்ள அல்லரசு அமைப்பு ஒவ்வோராண்டும் ஏப்ரல் 23ஆம் நாளின் இரவைபுத்தக இரவுஎனக் கடைபிடிக்கிறது. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவரிடையே அப்பழக்கத்தை உருவாக்குவதே அந்த அமைப்பின் நோக்கம். எனவே, அந்நாளில் இங்கிலாந்து முழுக்க வெவ்வேறு நிறுவனங்களின் வழியாக சிறைச்சாலைகள், நூலகங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், காப்பகங்கள், புகலிடங்கள் என வெவ்வேறு இடங்களில் புத்தகங்கள் அவ்வமைப்பால் வழங்கப்படுகின்றன. மேலும் ஆர்வம்மிக்கவர்கள் தங்களது சொந்தப் புத்தகங்களை தாங்கள் வாழும் பகுதியிலுள்ள பலருக்கும் வழங்குகிறார்கள்.  

இங்ஙனம் உலகப் புத்தக நாள் உலகெங்கும் வாழும் புத்தக ஆர்வலர்களால் பெருவிருப்போடு கடைபிடிப்பதைக் கண்ட ஐகஅபஅமைப்பு, உலகப் புத்தகத் தலைநகர் என்னும் கருத்தை 2001ஆம் ஆண்டில் உருவாக்கியது. அதன்படி ஒவ்வோராண்டும் ஒரு நகரம் உலகப் புத்தகத் தலைநகராக அறிவிக்கப்படுகிறது. அந்நாளில் அந்த ஓராண்டு முழுவதும் புத்தகம் தொடர்பான நிகழ்வுகள் நடைபெறுகின்றனஅவ்வகையில் இதுவரை  மாட்ரிடு (2001), அலெக்சாண்ட்ரியா (2002), புதுடெல்லி (2003), அன்வர்சு (2004), மாண்ட்ரீல் (2005), உடூரின் (2006), போகோடா (2007), ஆம்சுடெர்டாம் (2008), பெய்ரூட்டு (2009), பியூசோசு ஏர்சு (2011), ஈரவன் (2012), பாங்காக்கு (2013), போர்ட் அர்கோர்ட்டு (2014), இன்சியான் (2015), இராக்லாக்கு (2016), கந்யாக்ரீ (2017),  ஏதென்ஸ் (2018), சார்சா (2019) ஆகிய நகரங்களில் பன்னாட்டு பதிப்பாளர்கள் சங்கம் (International Publishers Association), பன்னாட்டு நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பு (International Federation of Library Associations and Institutions), பன்னாட்டு புத்தக விற்பனையாளர் கூட்டமைப்பு (International Booksellers Federation) ஆகியவற்றோடு இணைந்து உலகப் புத்தகத் தலைநகர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 2020 ஆம் ஆண்டிற்கான தலைநகர் கோலாலம்பூர் ஆகும். திபிலிசி (சார்சியா) 2021ஆம் ஆண்டிற்கான புத்தகத் தலைநகராக அறிவிக்கப்பட்டிருக்கிறது; 2022ஆம் ஆண்டில் புத்தகத் தலைநகராக விளங்க விரும்புவோரிடமிருந்து இப்பொழுது வேட்புகள் பெறப்படுகின்றன.




எனவே, உலகெங்கும் போற்றப்படும் புத்தகங்கள் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கின்றன; எதிர்காலத்திற்கு வழிகாட்டுகின்றன.  தலைமுறை தலைமுறையாக அறிவோட்டத்தை நிகழ்த்துகின்றன. வெவ்வேறு பண்பாடுகளுக்கிடையே புரிதலை உருவாக்குகின்றன. எனவே,  படிங்கள் . . . எப்பொழுதும் நீங்கள் தனிமையை உணரமாட்டீர்கள்!


ஒபாமாவின் பயணத்தால் கியூபாவில் மாற்றம் ஏற்படுமா?

குடியரசுத்தலைவர் பாரக் ஒபாமா, ஏறத்தாழ கடந்த 90 ஆண்டுகளில், பதவியிலிருக்கும்பொழுதே கியூபாவிற்கு வருகை தந்த முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டு குடியரசுத் தலைவர்ஆவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (20 மார்ச் 2016) மூன்றுநாள் பயணமாக கியூபா தீவிற்கு அவர் கிளம்பியிருந்தாலும், 2014 திசம்பரிலேயே உறவாடலுக்கான முன்முயற்சிகள் தொடங்கிவிட்டன.

கியூபாவுடன் வங்கி, நிதி, பயணம், வணிகம், பொருளாதாரம் ஆகிய தொடர்புகளை மேற்கொள்ளத் தன்னால் விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்தும் ஒழுங்காற்று விதிகளை, ஒபாமாவின் கியூபா பயணத்திற்கு முன்னதாக, அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டது.

கியூபாவுடன் இதமான உறவுகளைத் தொடர வேண்டும் என்னும் ஒபாமாவின் முடிவு குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருந்தபோதிலும், உண்மையில் அமெரிக்க அரசு கியூபாவுடன் கணிசமான அளவிற்கு வணிக நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டிருக்கிறது. இதனை மிகப் பெரும்பான்மையான அமெரிக்கர்கள் உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது. எடுத்துக்காட்டாக, 2000ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட, ’வணிகத் தடைகள் சீரமைப்பு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புச் சட்டம்’, கியூபாவிற்கு உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் விற்க அமெரிக்க வணிக நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது. 2000 ஆம் ஆண்டு தொடங்கி 2015 ஆம் ஆண்டு வரை, 5.3.பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருள்கள் அமெரிக்காவிலிருந்து கியூபாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என அமெரிக்க அரசின் புள்ளிவிவரக் கணக்கெடுப்புச் செயலகம் தெரிவிக்கிறது.

அந்த அடித்தளத்தின் மீது அண்மைக்கால முயற்சிகள், குறிப்பாகப் போக்குவரத்தில், கட்டடங்களை எழுப்புகின்றன. கடந்த ஆண்டில், ’மக்களுடன் மக்கள்’ என்னும் பெயரில் வழக்கமான சுற்றுலாவைவிட மேம்பட்ட கல்வியுலாவில் கலந்துகொண்டு கியூபாவிற்குச் சென்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் தொடக்கத்தில் இரண்டு மடங்காக உயர்ந்து, அரை நூற்றாண்டிற்குப் பின்னர் கியூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் விமானங்களைப் பட்டியலிட்டு விரைவில் இயக்க விமான நிறுவனங்கள் ஆயத்தமாகும் அளவிற்குத் தொடந்து கொண்டிருக்கிறது.

எனவே, குடியரசுத் தலைவரின் பயண வெளிச்சத்தில், புற்றீசலாய் வரும் அமெரிக்க விருந்தினர்களுக்கு அப்பால், கியூபாவிற்கு எதிர்காலம் எதனைக் கொண்டு வரும் என்றும் வினவுவது இயற்கையே. – இந்தத் திடீர் வருகைகளை ஏற்க கியூபா ஆயத்தமாய் இருக்கிறதா? அந்நிய முதலீடுகளை அமெரிக்க நாட்டின் ஒழுங்காற்று மாற்றம் அனுமதித்தாலும் அமெரிக்க வணிகங்கள் எந்த அளவிற்கு மிகக் கடுமையான தூண்டுதல் தேவைப்படும் பொருளாதாரத்தில் முதலீடு ஆர்வம் காட்ட உள்ளன?

மேலும், தற்போதைய அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ஒபாமாவின் இடத்திற்கு, அடுத்து வருபவர் ஒபாமாவின் பாதையிலிருந்து விலகிச் செல்ல வாய்ப்பு இருக்கிறதா?

இலத்தீன் – அமெரிக்க வணிகங்களையும் நிதியையும் கியூப வேளாண்மையையும் பகுப்பாய்பவர்கள் என்னும் வகையில் விரைந்து உருவாகும் இச்சிக்கல்களை மிக உன்னிப்பாக நாங்கள் கவனிக்கிறோம். இது வரையுள்ள நிலைமையைப் பற்றிய எங்களது கருத்துகள் பின்வருமாறு:

ஒபாமாவும் அவர் குடும்பத்தினரும் முதல்நாள் பழைய அவானாவில் உலா வந்தனர்

நடைபெறும் சீர்திருத்தங்கள்

கியூபப் பொருளாதாரத்தில் சந்தைச் சக்திகளை முக்கியப் பங்காற்ற அனுமதிக்கும் நோக்கில், கியூபா அரசாங்கம் தொடர் சீர்திருத்தங்களை அமலாக்கிய வேளையில் கியூபாவிற்குப் பயணிக்கவும் வணிகம் செய்ய தான் விதித்திருந்த தடைகள் சிலவற்றை அமெரிக்க அரசாங்கம் தளர்த்தியது.

2008 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தச் சீர்திருத்தங்கள் பயன்படுத்தப்படாத நிலங்களில் வேளாண்மை செய்ய தனியாட்களையும் கூட்டுறவு அமைப்புகளையும் அனுமதித்தன; பரந்த அளவில் சுய தொழில்களை மேற்கொள்ள இடமளித்தன; தனியார் உணவகங்களையும் தங்கு மனைகளையும் தனியார்கள் இயக்குவதற்கு ஏதுவாகத் தடைகளைத் தளர்த்தின; கியூப குடிமக்கள் வீடுகளை வாங்கவும் விற்கவும் அனுமதித்தன. மேலும், சந்தை சார்ந்த சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் சீரற்ற வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது. எனினும், சில மாதங்களாக கியூப அரசாங்கம், மீண்டும் ஒருமுறை, உணவு வழங்குதலில் விரிவாக்கப்பட்ட பங்கினை மேற்கொண்டிருக்கிறது.

அமெரிக்க நாட்டின் கொள்கை மாற்றங்கள், கியூபாவின் புரட்சிகர மெய்யியலை மாற்றி விடாத அளவிற்கு இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவதில் கியூபா அரசாங்கம் கவனமாக இருந்து கொண்டிருகிறது. கடந்த 15 மாதங்களில் அயல் நாட்டு அரசியல் தொடர்புகளும் பிற அணுகுமுறைகளும் மீண்டும் தொடங்கியுள்ள போதிலும், அமெரிக்காவின் ‘ரொக்கக் கொள்முதல்’ கொள்கையால், அமெரிக்காவிலிருந்து கியூபா மேற்கொண்ட உணவுப்பொருள் கொள்முதல் பாதிப்படைந்து – 2008 ஆம் ஆண்டு முதல் 22 விழுக்காட்டிற்கும் கீழே – அடிமட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையில், பிற நாடுகள் விரிவாக்கப்பட்ட வழிகளில் கடனையும் வணிகத்திற்காக நீடிக்கப்பட்ட விதிமுறைகளையும் வழங்கி வருகின்றன. வேளாண் நுகர்பொருள்கள், பிற பொருள்கள் மீது ரொக்க முன் பணமோ, மூன்றாம் நாட்டின் நிதியோ வழங்கப்பட்ட நிலையைப் பராமரிக்குமாறு அமெரிக்காவின் அந்நியச் சொத்துகள் கட்டுப்பாட்டுக் கருவூலத்திற்குக் கட்டளையாயிருக்கிறது.

பயணவிதிகள் தளர்த்தப்பட்டதால் அதிகளவிலான அமெரிக்கர்களின்ச சுற்றுலா வருகை அதிகரித்திருக்கிறது

கியூபாவிற்கு அமெரிக்க மந்தைகள்

இதற்கிடையில் கியூபாவிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாவினரும் புற்றீசலாய் வரும் அமெரிக்கர்களும் கியூபாவின் சுற்றுலா உள் கட்டமைப்பை அதன் வரம்பிற்கு, ஒருவேளை அதற்கு அப்பாலும், தள்ளியிருக்கின்றனர்.
இது வெறும் தொடக்கமே. குறைந்த அளவாக எட்டு அமெரிக்க விமான நிறுவனங்கள் கியூபாவிற்கு வணிக விமானங்களை (சுற்றுலா நிறுவனங்களின் ஒப்பந்த விமானங்களுக்கு மாறாக) இயக்க அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கின்றன. இவ்வாண்டின் இறுதியில் அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையில் 100க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குவதற்கு கதவைத் திறந்துவிட வாய்ப்பிருக்கிறது.

வெடித்தெழும் கியூபா சுற்றுலாப் போக்குவரத்து ஏற்கனவே துயர நிலையிலிருக்கும் அந்நாட்டின் உணவு அமைப்பின் மீதான நெருக்கடியை அதிகரிக்க இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சுற்றுலா உணவகங்களில் அதிகரிக்கும் உணவுத் தேவையும் கியூபாவில் பெருமளவில் விரிவடைந்து வரும் தனியார் உணவகங்களும் உள்நாட்டில் விலையேற்றத்தை உருவாக்குகின்றன. இதனால், கியூபியர்கள் தம் குடும்பத்தினருக்குத் தேவையான உணவை வழங்குதற்கு அல்லலுறும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இது, உணவு இறக்குமதியைப் பெருமளவில் சார்ந்திருக்கும் நிலைக்கு கியூபாவைத் தள்ளி, அதன் அரசாங்கத்திற்குச் செலவுடைய சிக்கலை உருவாக்கி உள்ளது. உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான மூலதனத்தைத் தேடும் இக்கட்டான நிலைக்கு வேளாண்மைத்துறை உள்ளாகியிருக்கிறது; ஆனால் மூலதனத்திற்கான உள்நாட்டு வளங்களோ மிக மிகக் குறைவாக உள்ளன. இதனால் அந்நிய முதலீட்டின் தேவைக்கான நெருக்கடி மேலோங்கியிருக்கிறது.

அமெரிக்கத் தூதரகத்தில் ஒபாமாவின் வருகைக்காகக் காத்திருக்கும் கியூபமக்கள்
 
வெளிநாட்டு டாலர்களின் தேவை

உண்மையில் கியூபா பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீடு கட்டாயமாகத் தேவைப்படுகிறது.

கடந்த முறை நடைபெற்ற கியூபாவின் பன்னாட்டு வணிகக் கண்காட்சியில், கியூபா வெளிநாட்டு வணிக அமைச்சர் ரொட்ரிகோ மல்மியர்கா, மொத்தமாக 8.2.பில்லியன் டாலர்கள் தேவைப்படும் 326 திட்டங்களைக் கொண்ட வணிக வாய்ப்புப் பட்டியலொன்றை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் அறிவித்தார். இப்பட்டியலில் இருந்தவை முந்தைய ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்த 40 திட்டங்களின் தேவைக்கும் மேற்பட்டவை ஆகும். முந்தைய திட்டங்கள் அனைத்தும் இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன; ஏனெனில், வெளிநாட்டு முதலீட்டுப் பங்காளிகளுடனான பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில் இருப்பதே எனக் கூறப்பட்டது.

உண்மையில், கியூபாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (2013ஆம் ஆண்டில் 2.7 % இருந்ததை) 5 விழுக்காட்டிற்கு உயர்த்தும் இலக்கை அடைய ஒவ்வோராண்டும் 2பில்லியன் டாலர் அந்நிய முதலீடு கியூபாவிற்குத் தேவையாக இருக்கிறது என்று மல்மியர்கா ஏற்றுக்கொண்டார். பன்னாட்டுத் தரம் என பலராலும் கருதப்படும் நிலையை கியூபா இன்னும் எட்டவில்லை என்றாலும், அதன் அந்நிய முதலீட்டு ஒழுங்காற்று விதிகள் படிப்படியாக உருவாகி வருகின்றன.

1990களிலிருந்து கியூபா தொடர்பான சட்டச் சிக்கல்களில் ஈடுபட்டு வருபவரான அரசு வழக்குரைஞர் ஜிம் உவய்செனட், கியூபாவை ’எல்லைப்புறச் சந்தை’ (frontier market) என வர்ணித்திருக்கிறார்:
வரையறையின்படி, நீங்கள் எல்லைப்புறத்தில் இருக்கிறீர்கள். . . நியூயார்க்கிலோ மியாமியிலோ உள்ளது போன்ற முதலீடு செய்யும் விதிகளையும் பாதுகாப்பையும் நீங்கள் விரும்பினால், நீங்கள் நியூயார்க்கிலோ மியாமியிலோதான் முதலீடு செய்ய வேண்டும்.
மாறாக, எக்கர்மேன் சட்ட நிறுவனத்தின் பங்காளிகளில் ஒருவரும் அதன் பன்னாட்டுச் செயல்பாடும் குழுவின் தலைவரும் கியூப-அமெரிக்க வழக்கறிஞருமான பெட்ரொ ஃபையர் பின்வரும் மாற்றங்களைக் காண்கிறார்:
வாடிக்கையாளர்கள், கியூபாவைப் பற்றிய தம்முடைய பார்வையை இப்பொழுது மாற்றி இருக்கிறார்கள். முன்னர் அவர்கள் ஏதேனும் செய்ய விரும்பினால், அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என வருந்தினார்கள். தற்பொழுது அவர்கள், பின்தங்கியிருப்பதாக வருந்துகிறார்கள்.

கோரிக்கைகளும் எதிர்வாதங்களும்

வழக்கறிஞரின் பேச்சு, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளைத் திரும்பப் பெறும் சிக்கல் என்னும் மற்றொரு கருத்தை எழுப்பியிருக்கிறது;
முட்கள் நிறைந்த இந்தச் சிக்கலைப் பற்றிக் கவனத்துடன் விவாதிப்பதற்கு இங்குள்ள இடம் போதாது. எனினும், அமெரிக்காவின் நீதித்துறை 1.9பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 5900க்கும் மேற்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளைத் திரும்பப் பெறுவதற்கு சான்றளித்திருக்கிறது என்பதனைக் கவனத்திற் கொள்ள வேண்டியது முக்கியம் ஆகும். பறிமுதலில் தங்களது சொத்துகளை இழந்து அமெரிக்காவின் குடிமக்களாகிவிட்ட கியூபியர்கள் தம் சொத்துகளுக்காக அமெரிக்க நீதிமன்றங்களில் (அதன் சட்டத்தன்மை எதிர்க்கப்பட்டிருந்தபோதிலும்) வழக்குத் தொடுக்க 1996ஆம் ஆண்டின் ஹெலம்ஸ் – பார்டன் சட்டத்தின் பிரிவுகள் அனுமதிக்கின்றன.

ஹெலம்ஸ் – பார்டன் சட்டத்தை, ’வழக்குரைஞர்களுக்கு முழு வேலை வாய்ப்பு அளிக்கும் சட்டம்’ என சில வழக்குரைஞர்கள் குறிப்பிடுவதைப் போல ஒருவேளை அது ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மாறாக, தடையாணையின் விளைவாக கியூபாவிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய அமெரிக்கா 1 ட்ரில்லியன் டாலரை கியூபாவிற்கு வழங்க வேண்டுமெனச் சுட்டிக் காட்டியிருக்கிறது.

அமெரிக்காவின் தடையாணை நீக்கப்பட்டாலும்கூட நீண்டதும் குழம்பம் நிறைந்ததுமான சட்டச் சாலை ஒன்றைக் காண வேண்டியிருக்கும் என்றே கூறலாம். ஹெலம்ஸ் – பார்டன் சட்ட ஆக்கம் தடையாணையைச் சட்டத்தில் நெறிமுறைப்படுத்தி இருப்பதால், அதனை மேம்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத்தலைவரின் அனுமதியைக் கோருகிறது.
வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன?

இதுவரை, கியூபாவுடனான உறவு, அமெரிக்கக் குடியரசுத்தலைவர் போட்டியில் பெரிய சிக்கலாக இருந்ததில்லை.
தற்பொழுது, கியூப-அமெரிக்கரான மார்க்கோ ரூபியா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதால், மனித உரிமையில் அக்கறையுள்ள மற்றொரு கியூப-அமெரிக்கரான டெட்குருஸ் என்னும் வேட்பாளர் எல்லாவகையான தளர்த்தல்களையும் கடுமையாக எதிர்க்கிறார். அரசியல் உறவுகளை இயல்பு நிலைப்படுத்தலை ’சோகத்தவறு’ என அவர் வர்ணித்திருக்கிறார்.
கியூபாவின் நிலையைப் பற்றி ஜான் காசியா எதுவும் பேசவில்லை; ஆனால் அவர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபொழுதே தடைகளை எளிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்கையில் அதற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்.

குடியரசுக் கட்சியின் பிற வேட்பாளர்களிலிருந்து வேறுபட்டு, டொனால்டு ட்ரம்ப் கியூபாவுடான அரசியல் உறவுகளை ஆதரிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம், “கியூபாவுடன் நல்லுறவு என்னும் கருத்தியல் அருமையானது; ஆனால் நாம் இன்னும் சிறப்பான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்” என அவர் கூறினார்.

பெரினி சான்ட்ரஸ், கியூபா மீதான தடையாணையை நீக்க அழைப்பு விடுத்திருந்த ஹிலாரி கிளிண்டனைப் போல, கியூபாவுடனான உறவை இயல்பு நிலைப்படுத்தலை ஆதரிக்கிறார். அவர், தான் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தடையாணையை நாடாளுமன்றம் நீக்கி விட்டாலும் குடியரசுத் தலைவருக்குள்ள செயலாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தி வணிக, பயணத் தடைகளை மேலும் தளர்த்துவேன் என்கிறார்.

வளர்ச்சிக்கு அடித்தளமிடுதல்

அமெரிக்கா தான் விதித்த தடைகளைத் தளர்த்தியது, பிற நாடுகளுடனான வணிகம் ஆகியன போன்ற சந்தை அணுகுமுறை சீர்திருத்தங்களின் விளைவாக, வலிமையான பொருளாதார விரிவாக்கத்திற்கான நல்ல நிலையை கியூபா இன்று அடைந்திருக்கிறது.

கியூபா அரசாங்கம், தனது அரசியல் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதில் அக்கறை காட்டப் போகிறதா அல்லது இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் கொள்கைகளின் தேவையை ஆதரிக்கவோ தடை செய்யவோ போகிறதா என்பதே இப்பொழுது எழுகின்ற வினா.

கியூபா அரசாங்கம் அதனுடைய பொருளாதாரத்தையும் உருவாகும் அமெரிக்காவுடனான உறவுகளையும் போலவே மெதுவாக நகர வலிமையான உறுதி பூண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
அமெரிக்கா தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்கும் விகிதத்திற்கு ஏற்பவே கியூபாவில் எங்ஙனம் மாற்றங்கள் உருவாகும் என்பதனை கியூபா அரசாங்கம் முடிவெடுத்து நகரும்.


ஏறத்தாழ 90ஆண்டுகளுக்குப் பின்னர் "ஏர்ஃபோர்சு ஒன்" விமானம் கியூபாவில் தரையிறங்குகிறது

கட்டுரையாளர் குறிப்பு - வில்லியம் ஏ. மெசினா,வேளாண்மைப் பொருளியலாளர், உணவு வேளாண்மை அறிவியல் நிறுவனம்,ஃபளோரிடா பல்கலைக்கழகம்,- பிரைன் சென்ட்ரியூ,இயக்குநர், இலத்தீன் அமெரிக்க வணிகச் சூழலியல் திட்டம்,
ஃபளோரிடா பல்கலைக்கழகம்.
நன்றி: த கான்வர்சேஷன்.காம் https://theconversation.com/as-obama-makes-historic-visit-is-cuba-ready-for-change-56399

மின்னம்பலம் மின்னிதழுக்காக மொழிபெயர்த்தது.
http://sin2.enmail.com/k/2016/03/27/1459036824

சனிக் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான புதிய நிலவியல் உண்மைகள் கண்டுபிடிப்பு!







சனிக் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான புதிய நிலவியல் உண்மைகள் கண்டுபிடிப்பு!--தாவீது இரத்தோரி

சனிக்கோள் மிகப்பெரிய டைட்டான். பள்ளங்கள் நிறைந்த போஃபே ஆகியன தொடங்கி வெந்நீர் ஊற்றுகளையுடைய இன்செலடசில் வரை 60க்கும் மேற்பட்ட நிலவுகளின் இல்லம் ஆகும். குறிப்பாக இன்செலடசில், நுண்ணியிரிகளை வளர்ப்பதற்குப் பொருத்தமானது என முன்மொழியப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதனுள்ளே இருக்கும் வெப்பப் பெருங்கடலுக்கு நன்றி. சில பில்லியன் ஆண்டுகளேயான பூமியில் நுண்ணறிவு உயிரிகள் பரிணமிக்க முடியுமானால், 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான நமது சூரியக் குடும்பத்தில் எங்கேனும் குறைந்த அளவாக மிக எளிய உயிரிகள் ஏதேனும் ஏன் இருக்க முடியவில்லை?

ஆனால், தற்போதைய வானியற்பியல் ஆய்விதழில் (Astrophysical Journal) வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு, மிக அண்மையில் 100 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர், பூமியில் டைனோசர்கள் உலவிக்கொண்டிருந்தபோதுதான், சனிக்கோளின் பெரும்பான்மையான நிலவுகள் தோன்றின எனக் கூறுகிறது. இது, நிலவுகளின் வயதுபற்றிய பொதுவான நமது புரிதலுக்கு வெல்விளி இடவும் புதிய பல வினாக்களை எழுப்பவும் செய்கிறது. இதை எப்படி நம்மால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்? இவ்வளவு குறுகிய காலத்துக்குள் அங்கே உயிரினங்கள் பரிணமித்துக் கொண்டிருக்கின்றனவா?

சனிக்கோளில் புரட்சி
நமது சூரியக் குடும்பத்திலுள்ள பெருங்கோள்களின் பெரிய நிலவுகள் அனைத்தும் ஏறத்தாழ ஒவ்வொரு கோளையையும் சுற்றியுள்ள வளிமேகம், தூசு ஆகியவற்றிலிருந்து பிறந்து வளர்ந்தன என நெடுங்காலமாக எண்ணப்பட்டு வந்தது. எனவே, அவற்றின் வயதும் அவை சுற்றிச்சுழலும் கோளின் வயதும், 4.5 பில்லியன் ஆண்டுகள் (சூரியக் குடும்பத்தின் வயது- ஒன்றாக இருக்கவேண்டும் என்று கருதப்பட்டது. எனினும், அந்தக் கோள்களால்- வெளிவட்டப்பாதையிலுள்ள நுண்கோள்கள், வால் விண்மீன்கள் உள்வட்டப்பாதையில் மோதல்களால் உருவான பெருந்துண்டுக் கூலங்கள் போன்றவற்றைப்போல-பின்னாளில் ஈர்க்கப்பட்ட சிறிய நிலவுகளையும் கொண்டிருக்கின்றன.

ஆனால், தற்போதைய புதிய ஆய்வு, சனிக்கோளின் முதன்மை நிலவுகளிலும் பல இளமையானவை என ஊகித்துரைக்கிறது. சனிக்கோளினுடைய முதன்மை நிலவுகளின் ஓத உறவுகளை உற்றுநோக்கிய ஆய்வாளர்கள் இதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். தெதைசு, டையோன், ரியா போன்ற இடைநிலையளவுள்ள நிலவுகள் மில்லியன்கணக்கான ஆண்டுகள் இருந்திருந்தால், தற்போதுள்ளதைவிட மிக அதிகமான அளவில் ஒவ்வொன்றும் மற்றொன்றின் வட்டப்பாதையில் தம் செல்வாக்கைப் பெற்றிருக்க வேண்டும் எனக் கண்டறிந்தனர்.

மேலும், இன்செலடசினல் தனக்கு அருகிலுள்ளவற்றுடன் கொண்டுள்ள ஓத ஊடாடுகையின் வழியாகப்பெறும் விசையின் விகிதம் (அதன் சுழல்வட்டப்பாதையின் மாற்றங்களிலிருந்து கணக்கிடப்படுகிறது; புகைத்திரள்கள் உமிழும் விசையிலிருந்து அளவிடப்படுகிறது), இந்தச் சூழல் நெடுங்காலமாக இவ்வாறு இருந்திருக்க இயலாது என ஊகித்துரைக்கிறது. எனவே, சனிக்கோளினுடைய இப்பகுதி நிலவுக் குடும்பத்தின் வயது அதிகளவாக 100 மில்லியன் ஆண்டுகளுக்கு அப்பால் இருக்காது என ஆய்வாளர்கள் முடிவு செய்கின்றனர்.

அவர்களின் முடிவு சரியாக இருந்தால்-அவர்களது மாதிரிகளின்மீது அறிவியலறிஞர்கள் பலருக்கு ஐயம் இருந்தபோதிலும்–அது குறிப்பிடத்தக்க முடிவாகும். அதன் பொருள், சனிக்கோளுக்கு இதற்கு முந்தைய தலைமுறை நிலவுகள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும்; அவை, கடுமையான மோதல்களால் அழிந்து அவற்றின் சிதைவுகளிலிருந்து மிமாசு, இன்செலடசினல், தெதைசு, டையோன், ரியா ஆகிய தற்போதைய நிலவுகள் தோன்றியிருக்க வேண்டும். வியாழன், யுரேனசு, நெப்டியூன் ஆகிய கோள்களைச் சுற்றியுள்ள வளையங்களைவிட சனிக்கோளைச் சுற்றியுள்ள வளையங்கள் அதிகம் கண்ணைக் கவருவதாக இருப்பதற்காக காரணத்தை விளக்கவும் இது உதவுகிறது. ஏனென்றால், ஒப்பீட்டளவில் அண்மையில் நிகழந்த பேரழிவு வழங்கிய பனிக்கட்டிச் சிதைவுகளிலிருந்து அவை உருவாகியிருக்க வேண்டும். டைட்டானும் அதற்கு வெளியே அண்மையிலுள்ள பிறவும் மேற்சொன்ன நிலவுக்கும் பில்லியன் ஆண்டுகள் முந்தியவையாக இருக்கக்கூடும் என்பதனால் அவை, அந்தப் பேரழிவு நிகழ்விலிருந்து தப்பிப் பிழைத்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

நாம் இந்தக் கருதுகோளை சோதிப்போமா? தற்போது, ஆய்வக மாதிரிகள் எதுவும் இல்லாதநிலையில், தொலைவிலுள்ள நிலவுகளின் வயதை நிர்ணயிப்பதற்கான சுதந்திரமான வழியெதனையும் அறிவியல் கொண்டிருக்கவில்லை. எனவே, அவற்றின் மேற்பரப்புகளின்மீது விளைந்துள்ள பள்ளங்களின் அடர்த்தியை மட்டுமே நாம் மதிப்பிட முடியும். நிலவுகளின் மேற்பரப்பின்மீது சிதைவுகள் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்த கால நீட்சியின் உச்ச அளவே பள்ளத்தின் உச்ச அளவான அடர்த்தி ஆகும். இம்முறையில் ஒவ்வொரு கோளினுடைய நிலவுகளின் மேற்பரப்போடு தொடர்புடைய வயதை மதிப்பிடும் வாய்ப்பை உருவாக்குகிறது.

சனிக்கோளில், இன்செலடசினல் சில பள்ளங்களைக் கொண்டிருக்கிறது. ஏனெனில், இது ஓதவிசை முறிவுகளாலும், பனிக்கட்டி வெடிப்புகளாலும் மீள்பரப்பாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. மிமாசிலும் ரியாவிலும் (வலுவான ஓத வெப்பம் இல்லாததால்) பள்ளங்கள் மிக அடர்த்தியாக இருக்கின்றன. ஆனால், இன்செலடசினலின் மீள்பரப்பாக்கத்தின் விளைவாக அந்த நிலவு எங்ஙனம் உருவானது என்பதை அதன் பள்ளங்களால் கூற இயலவில்லை. ஒவ்வொரு நிலவிலும் அதிகளவு பள்ளங்கள் அடர்ந்த மேற்பரப்பு, அதன் வயது குறைந்த அளவே எனக் காட்டுகிறது. ஆனால், அத்தாக்கம் ஏற்பட்ட விகிதத்தின் அளவு நமக்குத் தெரியாது என்பதே இதிலுள்ள சிக்கல். எனவே, இவற்றின் வயதை எண்களால் அளவிட்டுக் கூற முடியாது.

பெரும் விளைவுகள்
ஆய்வாளர்களின் கூற்று சரியாக இருந்தால், சனிக்கோளில் மிக அண்மையில் பேரழிவு நிலவழிவு (மீளுருவாதலும்) என்னும் பேரழிவு நிகழ்ந்திருக்க வேண்டும். இதன்விளைவாக, பிற மீபெரும் கோள்களான வியாழன் யூரேனசு ஆகியவற்றின் பெரிய நிலவுகள் உண்மையில் அந்தக் கோள்களின் அளவுக்கு வயதானவையா என்னும் வினா தோன்றுகிறது. நம்முடைய நிலவின் தோற்றம் 4 பில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர் ஏற்பட்ட ஒருவகையான பெரும் தாக்கத்தால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது ஓரளவு உறுதி.
இன்செலடசினலின் வயது உண்மையில் 100மில்லியன் ஆண்டுகளே என்றால், இவைபோன்ற இடங்களில் நுண்ணுயிரிகளைக் காணமுடியும் எனக் கூறிக்கொண்டிருக்கும் விண்ணுயிரியலாளர்களுக்கு இதுவோர் அடியாக இருக்கக்கூடும். இதன் பனிக்கட்டிப் படுகைகளுக்கு அடியில் வெப்பக்கடல் இருப்பதைப்போல, இது உயிரினங்கள் வசிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். ஆனால், இன்செலடசு மிக இளையதாக இருப்பதால், அங்கு உயிரினங்கள் தோன்றுவதற்குப் போதுமான காலம் தேவையாக இருந்திருக்குமோ?
இதை இன்னும் ஆய்வது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். பூமியில் 4.1 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர்–அது மிகமிக இளமையாக இருந்தபோது-சிலவகையான உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான குறிப்புகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்செலடசுவின் வயதை கிரிட்டேசியசு ஊழி என நிர்ணயித்தால், ஏற்கனவே அதன் உயிரிகளை கண்டறிந்திருக்க வேண்டும். அதன்பின்னர், இன்னும் அதிகளவில் அகிலம் முழுக்க உயிரினங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.

நல்வாய்ப்பாக, இதற்கான விடையை அறிய நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. கடந்த ஆண்டில், இன்செலடசுவில் இருக்கும் பெருங்கடலுக்கும் அதன் முதன்மையான பாறைகளுக்கும் இடையில் ஏற்பட்ட வேதியியல் எதிர்வினைகளின் விளைவாக அங்குள்ள நுண்ணியிரிகளுக்கு போதுமான ஆற்றல் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த எதிர்வினைகளிலிருந்து வெளிப்பட்ட ஹைட்ரஜன் மூலக்கூறுகளை அந்தக் கோளின் புகைத்திரைகளுக்குள் கண்டறியமுடியும் என்றும் ஆய்வகச் சோதனைகள் ஊகித்துரைக்கின்றன. அந்நிலவின் பயணத்தை 2015, அக்டோபர் மாதத்தில் காசினி (Cassini) ஆய்ந்து பார்த்து அறிந்தவற்றுள் சிலவே இவை. முடிவுகள் விரைவில் வெளிவரக்கூடும்.

தமிழில் அரிஅரவேலன்

கட்டுரையாளர் குறிப்பு-தாவீது இரத்தோரி-கோள் புவியியல் பேராசிரியர், திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

https://theconversation.com/saturns-moons-may-be-younger-than-the-dinosaurs-so-could-life-really-exist-there-56860

https://minnambalam.com/k/2016/04/08/1460073602

த இண்டிபெண்டன்டின் இறுதி இதழ்

 
த இண்டிபெண்டன்டின் இறுதி இதழ்-பால் லாஸ்மர்


த இண்டிபெண்டன்ட் இதழின் அச்சுவடிவ இறுதி மலர், இங்கிலாந்தில் வாழும் அதிருப்தியடைந்த சவூதிக்காரர் ஒருவருக்கு, சவூதி அரசரைக் கொல்லும் சதியில் தொடர்பிருந்ததாகக் குற்றம்சாட்டும் வலுவான புலனாய்வுக் கட்டுரையை முதற்பக்கத்தில் வெளியிட்டு, 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விதழ் வெளிவந்ததைப் போன்ற அதே நேர்த்தியோடும், தாகத்தோடும் வெளியேறுகிறது.

ஒரு டிராம் நிலையத்தில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றிலிருந்து பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரப் பயணிகள் அவசரமாக முந்திக்கொண்டு பின்வாங்கும் காட்சியை வலுவான ஒளிப்படமாக, தனது இறுதி முதற்பக்கத்தில் வெளியிட்டு, அதை மறக்கமுடியாத ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது. அவ்வாரம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய பயங்கரவாதத்தின் கடுமையான மனநிலையை அந்த ஒளிப்படம் கச்சிதமாகப் பிரதிபலித்தது. மற்ற இதழ்கள் நிகழ்விடத்தில் காயம்பட்ட பயங்கரவாதத்தின் சந்தேகத்தை படம்பிடித்துவிட்டுச் சென்றுவிட்டன. த இண்டிபெண்டன்ட்டின் தேர்வோ, உலக நிகழ்வுகளால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் விளைவைப் பற்றிய அதன் அக்கறையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

இறுதி இதழ், முக்கியமான பொதுநலம்சார்ந்த தனிநிலைக் கட்டுரைகள் பலவற்றையும் வழக்கமான முந்தையநாள் செய்திகளையும் நன்கு வெளியிட்டிருந்தது. ஆசிரியர்கள் மாநாட்டில் ஜெர்மி கார்பின் ஆற்றிய உரையானது, இதழின் அரசியல்பிரிவுத் துணையாசிரியர் நைசல் மோரிசிடமிருந்து “உழைப்பாளரின் புரட்சியை மோசமான தேர்தல் கண்டிருக்கமுடியும்” என்னும் அரசியல் ஊகத்துக்கு நேரெதிரான கூற்றோடு சேர்ந்து வந்திருந்தால் நல்ல கவனத்தைப் பெற்றிருக்கும்.

கருத்துகள்மீதான த இண்டிபெண்டன்டின் வறட்டுத்தனமற்ற அணுகுமுறை அதை எப்போதும் உயிர்ப்புடையதாகவும், வேறுபட்டதாகவும் ஆக்கிவிடுகிறது. அதன், தன் எதிரிகளைப் போன்றதன்று; அது ஒரு கருத்தைத் தழுவுவதற்குமுன்னர், நன்கு சிந்திக்கப்பட்டதாகவும், அடிக்கடி வெல்விளிக்கு உட்பட்டதாகவும் இருக்கும், அதனுடைய நிலைப்பாடு என்னவென்பதை உங்களால் ஒருபோதும் அறியமுடியாது. தனது விளக்க உரையாளர்களின் ஆதரவுப் பிரச்சாரத்தாலும் தவறான வழிநடத்தலாலும் நடைபெறும், எடுத்துக்காட்டாக கார்டியன், இதழ்களைவிட காரிபியன் நிகழ்வை (Corbyn phenomenon) இந்த இதழ் மிகவும் ஏற்றுக்கொள்கிறது. ‘தெருவில்’ எப்போதும் சிறப்பாக உள்ள த இண்டி, கார்பியன்கால மனப்பாங்கைப் பிடித்துவிட்டது.

“உண்மையைச் சொல்வது மிகவும் கடினம்” என்பதை தான் கண்டுகொண்டதாகக் கூறிய அலாஸ்டியர் காம்ப்பெல்லின் இரண்டு பக்க நேர்காணலின் தலைப்பைப் பார்த்ததும் இது, ஏப்ரல் முதல்நாள் செய்தித்தாள்தானா என நான் சரிபார்த்துக் கொண்டதை, நான் கட்டாயம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். பிளேர் காலத்தில் நிகழ்ந்த பேரழிவுக்குப்பின்னர் நேர்காணலுக்கு ஒப்புக்கொள்ள தொடர்ந்து சுத்தமாக மறுத்துவந்த காம்ப்பெல், ஒரு பெரிய நேர்காணலை வழங்கியிருப்பது வித்தியாசமான தேர்வாகும். இருந்தபோதிலும் அது குறிப்பிடத்தக்கதே.

‘காட்டுவிலங்கு’களைப் போன்று பேசுபவர் என்னும் முத்திரைகொண்ட பிளேர், த இண்டிபெண்டன்டுக்குப் பொருத்தமானவராக இருக்கவில்லை ‘ஏனென்றால் முர்டோக்கரும், டாக்கருமே இதன் உண்மையான செலுத்துநர்கள்’ என காம்ப்பெல் கூறுகிறார்.

பாட்ரிக் குக்கூபெர் வழங்கிய ‘பாக்தாத்தில் என்ன நடக்கிறது?’ என்னும் குழப்பமான செய்திகளால் எனது மன அமைதி திரும்பவந்தது. எப்போதும் வாசிக்கத்தக்க செய்திகளை வழங்கும் குக்கூபெர்ன், மிகச்சிறந்த பிரிட்டிஷ் வெளிநாட்டுச் செய்தியாளர் ஆவார். அவர் இண்டிபெண்டன்டின் புதிய இணைய இதழோடு இணைந்திருப்பது நல்வாய்ப்பாகும். மூன்றாவது பக்கத்தில், இண்டிபெண்டன்ட் இதழின் நிறுவுகை ஆசிரிய ஆன்ட்ரூஸ் விட்மன் ஸ்மித், “கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்பட்ட அச்சுப்பதிப்பை சாத்தியமற்றதாக ஆக்கியிருக்கும் தொழில்நுட்பம், எங்களை நாங்களே நிலைநிறுத்திக்கொள்ளும் ஆற்றலை வழங்கியிருக்கிறது” என அவ்விதழுக்கான அச்சுப்பதிப்புக்கான அபாயகரமான பிரச்னையை சுருக்கமாகத் தொகுத்துரைத்து இருக்கிறார்.

அழகின் கூறு

செய்தித்தாளைத் திருப்பும்போது, அச்சுப்பதிப்பின் அழிவில் தற்போதைய இணையத் தலைமுறை எதை இழக்கிறது என்னும் சிந்தனை என்னைத் தாக்கியது. இதுவே இறுதி அச்சுப்பதிப்பு என்பதனால், இது வலிமையான ஒளிப்படங்களும், வியப்பூட்டும் அச்சுக்கலையும் கொண்டதாக அழகிய கைத்திறனோடு நேர்த்தியாகவும், தூய்மையாகவும் வடிவமைக்கப்பட்டு அழகுணர்வில் மிகச்சிறந்ததாக இருக்க வேண்டும் என்று அதன் நிறுவனர்கள் ஆணையிட்டனர்.

எரிக் கில்லின் அச்சுக்கலை வளர்ந்துவந்திருந்த, இணையத்துக்கு முந்தைய தலைமுறையைச்சேர்ந்த நான், அச்சு வரைகலையின் தூய்மையான அழகையும் வெள்ளைத்தாளோடு உள்ள உறவின் நெருக்கத்தையும் அறிவதற்காக வாய்ப்பு தற்போதைய தலைமுறையினருக்குக் கிடைத்திருந்தால் வியப்படைவேன்.

1998ம் ஆண்டின் கோடைக்காலத்தில், த இண்டிபெண்டன்ட் இதழின் ஆசிரியர் சைமன் கெல்னர், அவ்விதழில் புலனாய்வு இதழாளராகப் பணியாற்ற வருமாறு, எனக்கு விடுத்த தொலைபேசி அழைப்பிலிருந்து அவ்விதழுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளின் இதழாளனாகவும், தொலைக்காட்சித் தயாரிப்பாளனாகவும் இருந்த எனக்கு, அந்த அழைப்பு, நாள்தோறும் தீப்பிடித்தாற் போன்ற வேலைக்கான ஞானக்குளியலாக இருந்தது. முதல்நாளில் ஒரு மணி நேரத்தில் 1000 சொற்களை விரைந்து எழுதியிருந்தது; எழுதினேன். அடுத்த மூன்று ஆண்டுகள், நான் புலானாய்வையும், பிறவற்றையும் பற்றி எழுதினேன். அது கடுமையான குத்து. ஆனால் ஊழலையும், மெத்தனத்தையும் எங்கள் வலிமையையும் மீறி, மடிமீதேறி விளையாடும் செல்லநாயைப் போலன்றி காவல்நாயாக கடித்துக் குதறினோம்.

2001ம் ஆண்டில் என் குடும்பத்தோடு இலண்டனிலிருந்து வெளியேறுவதற்காக நான் பதவி விலகினேன். ஆனால், பல மாதங்களுக்குப் பின்னர், 9/11 நிகழ்வையடுத்து அப்போதைய துணை ஆசிரியர் மைக்கேல் வில்லியம்சால் த இண்டிபெண்டன்ட் இதழில் ஞாயிற்றுக்கிழமைகளில் உதவுவதற்காக அழைக்கப்பட்டேன். இரு இதழ்களிலும் நான் பணியாற்றியபோது நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதினேன். நிதிப் பற்றாக்குறையுடைய ஞாயிற்றுக்கிழமை பதிப்புடனான எனது ஒப்பந்தம் 2007ம் ஆண்டு வரை நீடித்தது. அந்த ஒப்பந்தத்தை நான் நிறைவுசெய்யும்போது அதற்காக எழுதியதைவிட அதிகமாக அதற்கு தாள் வழங்குவதன்வழியாக சம்பாதித்திருக்கலாம். நானும், எனது கல்விப் பணியை மேம்படுத்துவதில் கவனம்செலுத்த விரும்பினேன்.

வளர்ந்த இதழியல்
த இண்டிபெண்டன்ட் இதழ்கள் இனிமையும், எளிய வேலையும் கொண்டவையன்று. பணத்திற்கு அப்பால் அதற்கேயுரிய பலவீனங்களையும் அது கொண்டிருந்தது. நான் பணியாற்றிய காலத்தில், தொலைநோக்குடைய தலைமைத்துவம், அறிவுச்சால்பு அல்லது கார்டியன் இதழுக்கு ஆலன் ரஸ்பிரிட்ஜர் வழங்கியதைப் போன்ற பொது உருவம் ஆகியவற்றை அவ்விதழ் கொண்டிருக்கவில்லை. மிக அண்மைக்காலம் வரை செய்தி ஒலிபரப்பிலோ, வேறெங்குமோ இண்டிபெண்டன்ட் ஆசிரியரின் கூற்றை மிக அரிதாகவே கேட்டிருப்பீர்கள். சிலவேளைகளில், குடும்ப அல்லது சமூகத் தொடர்புகளின் அடிப்படையில் வேலையமர்த்தங்கள் நிகழ்ந்ததாகத் தோன்றியதால், நல்ல தகுதியுடைய பணியாளர்கள் மிகவும் விரக்தியடைந்தார்கள்.

த இண்டிபெண்டன்ட் தன் வாசகர்களை மதிப்போடு நடத்தியது. அவர்களை நுண்ணறிவுடைய, பக்குவப்பட்ட தனது விவாதங்களாலும், வாதங்களாலும் மட்டுமே ஈர்க்கமுடியும் எனக் கருதியது. இவ்வணுகுமுறை, தன் வாசகர்களின் மோசமான தப்பெண்ணங்களுக்கு வெற்றுத்தீனி போடுகிற அதனுடைய போட்டியாளர்களிடமிருந்து வேறுபட்டிருந்தது. த இண்டிபெண்டன்ட் வாசகர்கள் எதை விரும்பினார்களோ துல்லியமாக அதையே த இண்டிபெண்டன்ட்டும் விரும்பியது. இம்மரபை அதன் வலைத்தள வரைவும் பின்பற்றும் என நம்புவோம்.

வரலாற்றுணர்வும், சகிப்புத்தன்மையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் முன்னெப்போதைக் காட்டிலும் இக்காலகட்டத்தில் மிகவும் தேவைப்படுகின்றன. ஆனால், இவை தற்போதைய பல இதழ்களில் இவை இல்லை என்பது கவலையளிக்கிறது.

https://theconversation.com/the-independents-final-edition-summed-up-all-that-is-powerful-about-newsprint-56874

தமிழில்: அரிஅரவேலன்

கட்டுரையாளர் குறிப்பு- பால் லாஸ்மர்,இதழியல் முதுநிலை விரிவுரையாளர், சசெக்சு பல்கலைக்கழகம்.

https://minnambalam.com/k/2016/04/07/1459987203

நிறவெறி: ஆன்ட்ரூ சாக்சனைப் பின்பற்றும் டொனால்டு டிரம்ப்

ஆன்ட்ரு சாக்சன்
2016 நவம்பர் 8ஆம் நாள் நடைபெற இருக்கும் அமெரிக்க குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி (Republican Party) சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் இருக்கும் டொனால்டு டிரம்ப் அக்கட்சிக்கே திகிலூட்டுபவராக இருக்கிறார். பீதியூட்டுகிற, பாதுகாப்பைக் குலைக்கும் தொனியிலான அவரது உரைகளைக் கேட்கும் நீங்கள், ‘இதற்கு முன்னர் இதுபோல எப்பொழுதும் நடந்திருக்காது’ என எண்ணியிருக்கக் கூடும்.  ஆனால்,  அது உண்மை அன்று.
            முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வேட்பாளர் நியமனத்தை நோக்கி டொனால்டு டிரம்ப் செல்கிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால்,  1829ஆம் ஆண்டு முதல் 1837ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 7ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவரும் 20 டாலர் பிரேரணையில் சர்ச்சைக்குரிய முகத்தைக்கொண்டு இருந்தவருமான ஆன்ட்ரு சாக்சனின்  கடந்துசென்ற வாழ்க்கையோடு டிரம்ப்பின் வாழ்க்கை ஒத்திருப்பதாக வரலாற்று எண்ணம்கொண்ட நோக்கர்கள் சிலர் கருதுகின்றனர்.
# 1: போட்டியை நோக்குக
1829ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையை சாக்சன் வெல்வதற்கு முன்னரே, அமெரிக்க நாட்டின் கட்சிகள் மாறிக்கொண்டிருந்த 1824ஆம் ஆண்டில் அவர் குடியரசுத் தலைவராக முயன்று தோற்றிருந்தார். வடகிழக்குப் பகுதியின் வணிகர்களும் கூட்டாட்சி நிர்வாக ஆதரவாளர்களான கடன் கொடுப்பவர்களும் முக்கியத்துவம் பெற்றிருந்த கூட்டாட்சியினர் (Federalists) கட்சி,  சாதாரண மக்களுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் எனக் கூறிக்கொண்ட தென்பகுதியைச் சேர்ந்த நிலவுடைமையாளர்களும் விவசாயிகளும் நிறைந்த சனநாயக – குடியரசினர் கட்சி என்னும் இரண்டு கட்சிகளையே அமைப்பு அதுவரை கொண்டிருந்தது.
            1824ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் தேர்தலில் சனநாயக – குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஐவர் போட்டியிட்டனர்; கூட்டாட்சியினர் ஒருவர் கூட போட்டியிடவில்லை.   சாக்சன் அதிகப் புகழையும் வாக்குகளையும் பெற்றிருந்தார்; ஆனால் போட்டியிட்ட ஐவரில் ஒருவர்கூட பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை.  பன்னிரண்டாவது திருத்தத்தைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் அவை (House of Representatives ) எடுத்த முடிவின் விளைவாக ஜான் குயின்சி ஆடம்ஸ் (John Quincy Adams) குடியரசுத் தலைவர் ஆனார்.
டிரம்பின் போட்டியாளரான ஹில்லரி கிளின்ட்டனுக்கும் ஆடம்ஸுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.  ஜான் குயின்சி ஆடம்ஸ், முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான் ஆட்மஸுக்கு மகன் என்றால், ஹில்லரி கிளின்டன் முன்னாள் முதல் பெண்மணி ஆவார்.  இருவரும் ஐவி லீக் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள்;  அமெரிக்க நாட்டின் செனட்டர்களாகவும் மாநிலச் செயலாளர்களாகவும் பணியாற்றியவர்கள்; தாங்கள் வாழும் காலத்தில் நிறுவப்பட்ட அரசியலமைப்பின் பிரதிநிதிகள்.

#2: கருத்தியல் மீது உள்ளுணர்வு
சாக்சன் கரோலினாவில் பிறந்தவர். அவர் தானே முயன்று கற்ற வழக்கறிஞர்; 1812ஆம் ஆண்டில் நிகழ்ந்த போரில் தேசிய கதாநாயகனாக உருவானவர்; பிரதிநிதிகள் அவைக்கு டென்னிசியிலிருந்து முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இத்தகு தகுதிகள் எவையும் டொனால்ட் டிரம்புக்குக் கிடையாது. ஆனால் சாக்சனிடமிருந்த ஒரு முக்கியமான பண்பு டிரம்பிடம் இருக்கிறது; அவர் கருத்தியலை(ideology)விட கருத்தின் (idea) பிரதிநிதியாக இருக்கிறார்.
1824ஆம் ஆண்டில் பிரதிந்திகள் அவையின் தேர்வாக ஆடம்ஸ் இருந்தார். மக்களின் விருப்பத்திற்கு எதிரான உயர்தட்டினரின் நாசவேலைக்குச் சான்றாக, சாக்சனுடைய ஆதரவாளர்கள் ‘ஊழல் பேரத்தால்’ பூசிமெழுகப்பட்டார்கள்.  1828ஆம் ஆண்டில் அதே உயர்தட்டினரை எள்ளிநகையாடி சாக்சன் குடியரசுத் தலைவராக உயர்ந்தார், தற்பொழுது வாசிங்டனுக்கு எதிராக டிரம்பு செல்வதைப் போல.
 “நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளின் பிரதிநிதியாக சாக்சன் இருந்தார்” என்கிறார் வால்டர் ஆர் மீடு (Walter R Mead) என்னும் வரலாற்றாளர்.  கூட்டாட்சி அரசாங்கத்திடம் அதிகாரமும் ஆதிக்கமும் குவிந்திருக்கின்றன; அவற்றைக் கொண்டு சமூகத்தின் நலத்தை மேம்படுத்தவும் காக்காவும் வாய்ப்புள்ள அனைத்தையும் செய்ய வேண்டும் என்னும் கருத்தே அவரது உலகப்பார்வையின் இதயமாக இருந்தது. டிரப்பு, குடியரசுக் கட்சியின் வேட்பாளராக விழைந்த போதிலும் வலிமையான மைய அரசாங்கம் வேண்டுமென வாதிடுகிறார்; பொருளாதாரம் மற்றும் நாட்டின் பாதுக்காப்பில் அதற்குரிய பங்கை வலியுறுத்துகிறார்; சாதாரண மக்களின் பாதுகாவலான தன்னைத்தானே திட்டமிட்டு முன்னிறுத்திக் காட்டுகிறார்.
மேலும், சாச்சனியர்கள்  (Jacksonians) அமெரிக்கா போரை நாடிச் செல்லக்கூடாது; ஆனால், போருக்கு அழைக்கப்பட்டால், “நிபந்தனையற்ற ஒப்படைவையும் முழுமையான வெற்றியையும்” அடைய வேண்டும் என நம்புகின்றனர்.  “ஐ.எஸ்.ஐ.எஸ். அச்சத்தின் மீது வெடிகுண்டை வீசுவேன்” என டிரம்பு கூறும்பொழுது, ஆன்ட்ரு சாக்சன் புகுத்திய பாதுகாப்பின்மை, தேசியவாதம், நாட்டுப்பற்று ஆகியவற்றைக்கொண்டு சொற்சிலம்பம் ஆடுகிறார்.

# 3 சாதாரண மக்களிடம் முறையீடு
டிரம்பும் சாக்சனும் அரசியல் நிறுவனத்திற்கு அப்பால் வாக்காளர்களின் உணர்வுகளிடம் முறையிட்டார்கள்.  ஃபோபர்ஸ் 400 நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கும் டிரம்பு, வால் ஸ்டீரிட் வங்கியினரை விமர்சிப்பதைப் போலவே ஆன்ட்ரு சாக்சன் பணக்காரராகவும் அதிகாரமுடையாகவும் இருந்தபோதிலும்,  பணக்காரர்களும் அதிகாரவர்க்கத்தினருக்கும் எதிராகச் சென்றார்.  சாக்சனின் இந்த முரண்பாடு, அவருடைய முறையீட்டிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
அமெரிக்காவின் இதயப்பகுதியில் மிகஅதிகமாக உள்ள  டிரம்பின் ஆதரவாளர்கள்,  அரசியற்சரிநிலைப் போக்கு (trend of political correctness) வெகு தொலைவிற்குச் சென்றுவிட்டது என நம்புகிறார்கள்.   கடலோர அறிவாளிகளிடம் இருந்துவந்த அழுத்தம், அவர்களது சொந்த எண்ணங்களைப் புரட்டிப்போட்டது. இதற்கு வலுவூட்டும்விதமாக, அரசியற்சரிநிலையை இழிவுபடுத்தியும் ‘ஐந்தாம் நிழற்குடைச்சாலையின் நடுவில் நின்று, வாக்காளர்களை இழக்காமல் சிலரைச் சுட’ அவரால் முடியும் என்னும் தனக்கு மிகவும் விசுவாசமான தன் ஆதாரவாளர்களின்  பாராட்டிப் பராமரித்தும் டிரம்ப் நடந்துகொள்கிறார்.
               சாக்சனின் வாக்கு வங்கியாக இருந்த, “இதுபோலச் சொல்க” என்னும் சாக்சனின் ஆளுமையையும் சமூக நல்லிணக்க அலட்சியத்தையும் பாராட்டிய உள்நாட்டு வாக்காளர்களை இவர்கள் நினைவூட்டுகிறார்கள்.  “சாக்சன் தன் முதன்மை அரசியல் எதிரியை சுடவும் தன் குடியரசுத் துணைத்தலைவரை தூக்கிலிடவும் விரும்பியபொழுதிலும் பெருமளவு பிரபல ஆதரவினைப் பெற்றிருந்தார்” என சாக்சனைப் பற்றி ஒரு மேற்கோள் உண்டு.
 
#4. நிறுவனத்தின் மீதான குற்றம்
 “இதுபோன்ற கருத்துரைகள் அரசியல் நிறுவனத்தைப் புண்படுத்தும். சாக்சனை தகுதியற்றவர், அவமரியாதைக்குரியவர், ஆத்திரக்காரர், அபயகரமானவர் என்றெல்லாம் அழைத்து அவரை தாமஸ் ஜெபர்சன் எச்சரித்தார்.  பின்னர், அரசியல் தலைவர்கள் “வாய்ப்பேச்சு வீரர்கள்” எனக் கண்டித்த சாக்சன், தனது அமைச்சரவையில் பொதுப்பணியில் அனுபவமற்ற வணிகர்களை இடம்பெறச் செய்தார்.

டொனால்ட் டிரம்பு
இதேபோன்ற உறவே தற்போதைய குடியரசுக்கட்சித் தலைவர்களுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நிலவுகிறது. அவர்கள் இவரை, அபாயகரமானவராகவும் ‘தேர்ந்தெடுக்கப்படக் கூடாதவரா’கவும் காண்கிறார்கள். டிரம்ப் சங்கடம்தரும் குடியரசுத் தலைவராக இருப்பார் என கருத்துக் கணிப்புகளின் பொதுக்கருத்தாக இருந்தபோதிலும் அவர் இன்னும் உறுதிப்பாடு உடையவராகவும் பெருகிவரும் ஆதரவாளர்களைக் கொண்டவராகவும் இருக்கிறார்.

#5: இனவாதம்
சாக்சனைப் போலவே டிரம்பும் வெள்ளையரிகளிடமே முக்கியமாக முறையிடுகிறார். வெள்ளையர்களின் வளர்ச்சியும் பாதுகாப்பும் அவரது வாகையர்களாகும். மெக்சிகனிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வருகிறவர்கள் போதைப்பொருள்களை கடத்தி வருகிறார்கள்; குற்றங்களிலும் வல்லுறவிலும்  ஈடுபடுகிறார்கள் என கு குளசு குளான் (Ku Klux Klan) தெரிவித்த கருத்தை அவர் மறுத்தார்.  வீடற்ற இசுபானியர் ஒருவரை அவரது விசிறிகள் அடித்தனர் என்பதை அவர் கேட்டது அவர்களை “உணர்ச்சிகரமானவர்கள்” என அழைத்தார். யூத குடியரசுக் கட்சியினர் சிலரைப் போல தானும் பேச்சுவார்த்தையாளர் என்பதனால் அவர்கள் தன்னைப் புரிந்துகொள்வர்கள் என்றார்.  வெள்ளை மேலாதிக்கவாதியின் பாராட்டை மறுகீச்சிட்டார். இருப்பினும் “நீங்கள் சந்தித்தவர்களிலேயே இவர்தான் மிகக்குறைவாக இனவாதம் பேசுபவர்” என்னும்  பிம்பத்தையும் தக்கவைத்துக்கொள்கிறார்.
            டிரம்பின் தற்காப்புவாதம் புரிந்துகொள்ளக் கூடியதே. ஏனென்றால், அவரது இனவாதம் தனித்தன்மை வாய்ந்தது. அவர் ஆப்பிரிக-அமெரிக்கர்களையும் லத்தினோகளையும் பிற வெள்ளையர் அல்லாதவர்களையும் துல்லியமாகக் குறிப்பிட்டு வெறுக்கவில்லை; சாச்சனைப் போலவே அவர்களது உரிமைகளை மதிக்க மறுக்கிறார்.  வெள்ளைப் பெரும்பான்மையினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வரை சிறுபான்மையினர் அவர்கள் தம் வாழ்க்கையை வாழ முடியும்.
            வரலாற்றில், சாக்சனைவிட சிறப்பாக இக்கருத்தை வேறு எந்த குடியரசுத் தலைவரும் பிரதிநிதித்துவப்படுத்தியது இல்லை. அவர், வெள்ளையர்களின் குடியிருப்பில் இருந்து வெகுதொலைவில் “இந்தியர்”களைக் குடியேற்ற வகைசெய்த இந்தியர்களை அப்புறப்படுத்தல் சட்டத்தில் கையொப்பமிட்டுவிட்டு, அதனை “அரசாங்கத்தின் இரக்கம் மிகுந்த கொள்கை” என “மகிழ்ச்சி”யோடு அறிவித்தார்.  
     
       இந்த பழங்குடியினர் தம்மளவில் அச்சுறுத்துகிறவர்கள் அல்லர், ஆனால் வெள்ளையரின் வளமைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டவர்கள். எனவேதான், சாக்சன் மிசிசிபி ஆற்றிற்கு மேற்கே பழங்குடியினரை கட்டாயமாக அப்புறப்படுத்த ஆணையிட்டார்.  அப்பொழுது 4000 செரோகியர்களும் (Cherokee) 3500 கிரிக்கியர்களும் (Creeks) மாண்டனர் எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் “கண்ணீரின் சுவடுகள்” என அறியப்படுகின்றன.
            சனநாயகக் கட்சியின் தந்தையென சாச்சனை சிலர் மதிப்பர்.  அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின் பொழுது அத்தகுதி அவருக்கு வாய்த்தது. 1824ஆம் ஆண்டில் தனது ஆதரவாளர்களின் பாதையில் அவர் சென்றார். இதனால் அவர் 1828 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கும் 1832ஆம் ஆண்டின் மறுதேர்தலுக்கும் செலுத்தப்பட்டார்.   அவர்தம் குடியரசுத் துணைத்தலைவரான மார்டின் வான் புயுரன் (Martin Van Buren, அவருக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, சனநாயகக் கட்சியினருக்கு சாதாரணர்களிடமான தங்களது முறையீடே தங்களை அதிகாரத்தில் இருத்தியிருக்கிறது எனத் தெளிவுபடுத்தியது.
            டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அரசியல் மேம்பாட்டின்  புதிய ஊழியைக் கட்டியம்கூறுபவராக எஞ்சியிருப்பார் என்பதனைக் காணலாம்.  டிரம்ப்  பெரும்பான்மையான முதன்மை வாக்குகளை வெல்வாரேயானால் வேட்பாளர்களை நியமிக்கும் விதிகளை மாற்றுதல்  அல்லது வழக்காறுகளோடு பேச்சுவார்த்தை நடத்துதல் பற்றிய பேச்சுகள் நிலவுகின்றன.  இலக்கை அடைதலின் பாதையில்  அவர் எச்சமாக இருப்பார். டிரம்ப் போட்டியில் நுழைந்த விதிகளின்படி அவர் வென்ற வேட்பாளர் நியமனத்தை அவர் மறுக்கக்கூடும்.  அவ்வாறு நிகழ்ந்தால், குடியரசுக் கட்சியினர் 1824 – 1828 காலகட்ட நிகழ்வுகளை நினைவுபடுத்திக் கொண்டு, 2020 ஆம் ஆண்டில் அவர்கள் எதனை எதிர்ப்பார்க்க வேண்டும் என்பதனை தமக்குள் தாமே வினவிக்கொள்ள வேண்டும்.
<><><><><><><><> 

அமெரிக்காவிலுள்ள எக்சஸ் பல்கலைக்கழக அரசாங்கத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் ஹின்னா யானிடெல் ரெனின்ஹர்டுட் 2016 மார்ச் 11ஆம் நாளிட்ட ‘த கான்வர்சேசன்’ இணைய இதழில் எழுதிய “ஆன்ட்ரூ சாக்சன்: டொனால்டு டிரம்பின் குடியரசுத் தலைமைக்கு முன்னோன்” கட்டுரையின் தமிழாக்கம்.



நன்றி: மின்னம்பலம்.காம் 2016 மார்ச் 16 புதன்
https://minnambalam.com/k/1458086401

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...