குழந்தைகளை குழந்தைகள் பார்த்துக்கொள்வார்கள்



குழந்தைகள் பிரச்சனைக்கு உரியவர்கள் அல்லர்
குழந்தைகளுக்குப் பிரச்சனைகள் இருக்கின்றன
குழந்தைகளின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள
குழந்தைகளின் உலகத்திற்குள் புகவேண்டும் நாம்
குழந்தைகள் உலகத்திற்கான திறவுகோல்
உங்களது கையிலிருத்து நீண்டு மிரட்டும் பிரம்பு அன்று
குழந்தையாய் நீங்களும் மாறும் திறனில் இருக்கிறது
மாறும் திறனற்றவர்கள்
பெற்றோர் ஆசிரியர் என்னும்
அடையாளம் துறந்து வெளியேறுங்கள் தயவுசெய்து
குழந்தைகளை
குழந்தைகள் பார்த்துக்கொள்வார்கள்
தமது ஊரை
தாமே காத்துக்கொள்ளப் போராடும்
எம் எளிய மக்களைப் போல

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...