Posts

கலகத் தமிழிசைக் கலைஞர்

Image
கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவையு"ம் கலையில்லை; அவை வெறும் பரப்புரைகள்” என்று இடையறாது சொல்லிவந்த வெங்கட்சாமிநாதன், இடதுசாரி மேடையொன்றில் அரங்கேறிக்கொண்டிருந்த கலைநிகழ்ச்சிகளை வறுத்த நிலக்கடலையை கொரித்தவாறே கவனித்துக்கொண்டு இருந்தார். அங்கு அரங்கேறிய சில நிகழ்வுகள் அவரின் கருத்திற்கு வலுச்சேர்ப்பனவாக இருந்தன. அவர் சலிப்படைந்து, ‘சரி கிளம்பலாம்’ என எண்ணியபொழுது கறுத்த, குள்ளமான, ஒல்லியான 25வயதே மதிக்கத்தக்க, நகரத்துப் பகட்டுகள் எதுவுமில்லாத இளைஞர் ஒருவர் மேடையேறி ஒலிவாங்கியை எடுத்து பாடத்தொடங்கினார். கணீரென்ற அவரது குரலொலியும் பாடலும் இசையும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமான வெ.சா.வின் செவியைப்பிடித்து இழுத்து நிறுத்தின. கையிலிருந்த நிலக்கடலை தீர்ந்த பின்னரும் அவர் அங்கேயே நின்று அந்த இளைஞரின் இசைக்கடலுக்குள் மூழ்கிப்போனார். அந்த இசைக்குள் பொதிந்துவந்த ஆதிக்க எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் எழுச்சி ஆகிய பாடுபொருள்கள் வலதுசாரியான வெ.சா.வுக்கு உவப்பானதாக இருந்திருக்காது; ஆனாலும் அவரால் அ

பல்வேறு இராமாயணங்களும் பரிவார் இராமாயணமும்

Image
                                                                      ஒரு காப்பியம் ஒரேயொருவரின் சிந்தனையில் தோன்றி ஒரேயொரு மொழியில் ஒரேயொரு பண்பாட்டை மட்டும் பேசுவதில்லை . மாறாக , பலரின் சிந்தனையில் பல்வேறு மொழிகளில் பல்வேறு பண்பாடுகளைப் பேசும் பல்வேறு கதைகூறல்களிற் காணப்படும் பொதுமைக்கூறுகளை இணைத்து மொழியும்பொழுது ஒரு காப்பியம் தோன்றுகிறது எனலாம் .   அக்காப்பியப் பனுவலுங்கூட வாய்மொழி மரபில் அதனைப் பாடும் ஒவ்வொருவரின் அன்றைய மனநிலைக்கேற்ப நீண்டும் சுருங்கியும் வெளிப்படுகின்றது . எழுத்துமரபில் அக்காப்பியப் பனுவலை படியெடுக்கும்பொழுது படியெடுப்பவரின் சிந்தனைற்கு ஏற்ப நீளவும் குறுகவும் வாய்ப்பிருக்கிறது . மேலும் அக்காப்பியத்தைச் சுவைப்பவன் தனது சுவைக்கும் திறமைக்கும் ஏற்ப அதில் புதியனவற்றைச் சேர்க்கவும் நீக்கவும் கூடும் . இவை போன்றவற்றால் காலவோட்டத்தில் ஒரே கதைக்கு பல்வேறு கதைகூறல்களும் பனுவல்களும் தோன்றியுள்ளன . அவை ஒவ்வொன்றும் அவை வழக்கப்படும் பகுதியினரின் பண்பாட்டை எதிரொலிக்கின்றன என்பர் அறிஞர் .     இவ்வாறுதான் இராமாயணத்திற்கும் பல்வேறு பனுவல்கள் நாட்டார் பாடல் , நாட்டார் கதை , தொ

காற்றின் நிறம் பச்சை உப்பின் நிறம் சிவப்பு

Image
  மார்க்சியச் செயல்பாட்டாளரான பர்வதவர்த்தினி பெண்ணுரிமைக் களத்திலும் குழந்தைகள் உரிமைக் களத்திலும் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருப்பவர் . நாடக நடிகர் , ஆய்வாளர் , உரையாளர் எனப் பன்முகங்கொண்ட அவரின் இன்னுமிரு முகங்கள் எழுத்தாளர் , கவிஞர் ஆகியன . முந்தைய மூன்று முகங்களும் அவரது களச்செயற்பாட்டில் வெளிப்படுபவை . பின்னிரு முகங்களும் அவரது முகநூற்பதிவுகளின் வழியே பலருக்கும் தெரியவந்தவை .   அவர் தனது களப்பணி , செலவு ( பயணம் ), உரையாடல் ஆகியவற்றில் தான் பெற்ற பட்டறிவுகளை அவ்வவ்பொழுது முகநூலில் தொடர்ந்து பதிகிறார் ; அவற்றின் வழியாக மற்றவர்களோடு உரையாடி தன்னையும் பிறரையும் செழுமைப்படுத்துகிறார் . அத்தொடர்வினையில் குழந்தைகள் தொடர்பாக முகநூலில் அவரெழுதிய 52 பதிவுகளின் தொகுப்பே “ காற்றின் நிறம் பச்சை ; உப்பின் நிறம் சிவப்பு ” என்னும் நூல் . இவற்றுள் சில பதிவுகள் சிறுகதைக்கான களங்கள் ! இலிட்டில்சு (Littles) என்னும் அறக்கட்டளையின் வழியாக மதுரை நாகமலைப் புதுக்கோட்டையிலும் அதனைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் வாழும் விளிம்புநிலைக் குழந்தைகளின் குழந்தைமையையும் உரிமைகளையும் பாதுகாக