Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts

சனிக் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான புதிய நிலவியல் உண்மைகள் கண்டுபிடிப்பு!







சனிக் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான புதிய நிலவியல் உண்மைகள் கண்டுபிடிப்பு!--தாவீது இரத்தோரி

சனிக்கோள் மிகப்பெரிய டைட்டான். பள்ளங்கள் நிறைந்த போஃபே ஆகியன தொடங்கி வெந்நீர் ஊற்றுகளையுடைய இன்செலடசில் வரை 60க்கும் மேற்பட்ட நிலவுகளின் இல்லம் ஆகும். குறிப்பாக இன்செலடசில், நுண்ணியிரிகளை வளர்ப்பதற்குப் பொருத்தமானது என முன்மொழியப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதனுள்ளே இருக்கும் வெப்பப் பெருங்கடலுக்கு நன்றி. சில பில்லியன் ஆண்டுகளேயான பூமியில் நுண்ணறிவு உயிரிகள் பரிணமிக்க முடியுமானால், 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான நமது சூரியக் குடும்பத்தில் எங்கேனும் குறைந்த அளவாக மிக எளிய உயிரிகள் ஏதேனும் ஏன் இருக்க முடியவில்லை?

ஆனால், தற்போதைய வானியற்பியல் ஆய்விதழில் (Astrophysical Journal) வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு, மிக அண்மையில் 100 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர், பூமியில் டைனோசர்கள் உலவிக்கொண்டிருந்தபோதுதான், சனிக்கோளின் பெரும்பான்மையான நிலவுகள் தோன்றின எனக் கூறுகிறது. இது, நிலவுகளின் வயதுபற்றிய பொதுவான நமது புரிதலுக்கு வெல்விளி இடவும் புதிய பல வினாக்களை எழுப்பவும் செய்கிறது. இதை எப்படி நம்மால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்? இவ்வளவு குறுகிய காலத்துக்குள் அங்கே உயிரினங்கள் பரிணமித்துக் கொண்டிருக்கின்றனவா?

சனிக்கோளில் புரட்சி
நமது சூரியக் குடும்பத்திலுள்ள பெருங்கோள்களின் பெரிய நிலவுகள் அனைத்தும் ஏறத்தாழ ஒவ்வொரு கோளையையும் சுற்றியுள்ள வளிமேகம், தூசு ஆகியவற்றிலிருந்து பிறந்து வளர்ந்தன என நெடுங்காலமாக எண்ணப்பட்டு வந்தது. எனவே, அவற்றின் வயதும் அவை சுற்றிச்சுழலும் கோளின் வயதும், 4.5 பில்லியன் ஆண்டுகள் (சூரியக் குடும்பத்தின் வயது- ஒன்றாக இருக்கவேண்டும் என்று கருதப்பட்டது. எனினும், அந்தக் கோள்களால்- வெளிவட்டப்பாதையிலுள்ள நுண்கோள்கள், வால் விண்மீன்கள் உள்வட்டப்பாதையில் மோதல்களால் உருவான பெருந்துண்டுக் கூலங்கள் போன்றவற்றைப்போல-பின்னாளில் ஈர்க்கப்பட்ட சிறிய நிலவுகளையும் கொண்டிருக்கின்றன.

ஆனால், தற்போதைய புதிய ஆய்வு, சனிக்கோளின் முதன்மை நிலவுகளிலும் பல இளமையானவை என ஊகித்துரைக்கிறது. சனிக்கோளினுடைய முதன்மை நிலவுகளின் ஓத உறவுகளை உற்றுநோக்கிய ஆய்வாளர்கள் இதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். தெதைசு, டையோன், ரியா போன்ற இடைநிலையளவுள்ள நிலவுகள் மில்லியன்கணக்கான ஆண்டுகள் இருந்திருந்தால், தற்போதுள்ளதைவிட மிக அதிகமான அளவில் ஒவ்வொன்றும் மற்றொன்றின் வட்டப்பாதையில் தம் செல்வாக்கைப் பெற்றிருக்க வேண்டும் எனக் கண்டறிந்தனர்.

மேலும், இன்செலடசினல் தனக்கு அருகிலுள்ளவற்றுடன் கொண்டுள்ள ஓத ஊடாடுகையின் வழியாகப்பெறும் விசையின் விகிதம் (அதன் சுழல்வட்டப்பாதையின் மாற்றங்களிலிருந்து கணக்கிடப்படுகிறது; புகைத்திரள்கள் உமிழும் விசையிலிருந்து அளவிடப்படுகிறது), இந்தச் சூழல் நெடுங்காலமாக இவ்வாறு இருந்திருக்க இயலாது என ஊகித்துரைக்கிறது. எனவே, சனிக்கோளினுடைய இப்பகுதி நிலவுக் குடும்பத்தின் வயது அதிகளவாக 100 மில்லியன் ஆண்டுகளுக்கு அப்பால் இருக்காது என ஆய்வாளர்கள் முடிவு செய்கின்றனர்.

அவர்களின் முடிவு சரியாக இருந்தால்-அவர்களது மாதிரிகளின்மீது அறிவியலறிஞர்கள் பலருக்கு ஐயம் இருந்தபோதிலும்–அது குறிப்பிடத்தக்க முடிவாகும். அதன் பொருள், சனிக்கோளுக்கு இதற்கு முந்தைய தலைமுறை நிலவுகள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும்; அவை, கடுமையான மோதல்களால் அழிந்து அவற்றின் சிதைவுகளிலிருந்து மிமாசு, இன்செலடசினல், தெதைசு, டையோன், ரியா ஆகிய தற்போதைய நிலவுகள் தோன்றியிருக்க வேண்டும். வியாழன், யுரேனசு, நெப்டியூன் ஆகிய கோள்களைச் சுற்றியுள்ள வளையங்களைவிட சனிக்கோளைச் சுற்றியுள்ள வளையங்கள் அதிகம் கண்ணைக் கவருவதாக இருப்பதற்காக காரணத்தை விளக்கவும் இது உதவுகிறது. ஏனென்றால், ஒப்பீட்டளவில் அண்மையில் நிகழந்த பேரழிவு வழங்கிய பனிக்கட்டிச் சிதைவுகளிலிருந்து அவை உருவாகியிருக்க வேண்டும். டைட்டானும் அதற்கு வெளியே அண்மையிலுள்ள பிறவும் மேற்சொன்ன நிலவுக்கும் பில்லியன் ஆண்டுகள் முந்தியவையாக இருக்கக்கூடும் என்பதனால் அவை, அந்தப் பேரழிவு நிகழ்விலிருந்து தப்பிப் பிழைத்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

நாம் இந்தக் கருதுகோளை சோதிப்போமா? தற்போது, ஆய்வக மாதிரிகள் எதுவும் இல்லாதநிலையில், தொலைவிலுள்ள நிலவுகளின் வயதை நிர்ணயிப்பதற்கான சுதந்திரமான வழியெதனையும் அறிவியல் கொண்டிருக்கவில்லை. எனவே, அவற்றின் மேற்பரப்புகளின்மீது விளைந்துள்ள பள்ளங்களின் அடர்த்தியை மட்டுமே நாம் மதிப்பிட முடியும். நிலவுகளின் மேற்பரப்பின்மீது சிதைவுகள் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்த கால நீட்சியின் உச்ச அளவே பள்ளத்தின் உச்ச அளவான அடர்த்தி ஆகும். இம்முறையில் ஒவ்வொரு கோளினுடைய நிலவுகளின் மேற்பரப்போடு தொடர்புடைய வயதை மதிப்பிடும் வாய்ப்பை உருவாக்குகிறது.

சனிக்கோளில், இன்செலடசினல் சில பள்ளங்களைக் கொண்டிருக்கிறது. ஏனெனில், இது ஓதவிசை முறிவுகளாலும், பனிக்கட்டி வெடிப்புகளாலும் மீள்பரப்பாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. மிமாசிலும் ரியாவிலும் (வலுவான ஓத வெப்பம் இல்லாததால்) பள்ளங்கள் மிக அடர்த்தியாக இருக்கின்றன. ஆனால், இன்செலடசினலின் மீள்பரப்பாக்கத்தின் விளைவாக அந்த நிலவு எங்ஙனம் உருவானது என்பதை அதன் பள்ளங்களால் கூற இயலவில்லை. ஒவ்வொரு நிலவிலும் அதிகளவு பள்ளங்கள் அடர்ந்த மேற்பரப்பு, அதன் வயது குறைந்த அளவே எனக் காட்டுகிறது. ஆனால், அத்தாக்கம் ஏற்பட்ட விகிதத்தின் அளவு நமக்குத் தெரியாது என்பதே இதிலுள்ள சிக்கல். எனவே, இவற்றின் வயதை எண்களால் அளவிட்டுக் கூற முடியாது.

பெரும் விளைவுகள்
ஆய்வாளர்களின் கூற்று சரியாக இருந்தால், சனிக்கோளில் மிக அண்மையில் பேரழிவு நிலவழிவு (மீளுருவாதலும்) என்னும் பேரழிவு நிகழ்ந்திருக்க வேண்டும். இதன்விளைவாக, பிற மீபெரும் கோள்களான வியாழன் யூரேனசு ஆகியவற்றின் பெரிய நிலவுகள் உண்மையில் அந்தக் கோள்களின் அளவுக்கு வயதானவையா என்னும் வினா தோன்றுகிறது. நம்முடைய நிலவின் தோற்றம் 4 பில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர் ஏற்பட்ட ஒருவகையான பெரும் தாக்கத்தால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது ஓரளவு உறுதி.
இன்செலடசினலின் வயது உண்மையில் 100மில்லியன் ஆண்டுகளே என்றால், இவைபோன்ற இடங்களில் நுண்ணுயிரிகளைக் காணமுடியும் எனக் கூறிக்கொண்டிருக்கும் விண்ணுயிரியலாளர்களுக்கு இதுவோர் அடியாக இருக்கக்கூடும். இதன் பனிக்கட்டிப் படுகைகளுக்கு அடியில் வெப்பக்கடல் இருப்பதைப்போல, இது உயிரினங்கள் வசிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். ஆனால், இன்செலடசு மிக இளையதாக இருப்பதால், அங்கு உயிரினங்கள் தோன்றுவதற்குப் போதுமான காலம் தேவையாக இருந்திருக்குமோ?
இதை இன்னும் ஆய்வது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். பூமியில் 4.1 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர்–அது மிகமிக இளமையாக இருந்தபோது-சிலவகையான உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான குறிப்புகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்செலடசுவின் வயதை கிரிட்டேசியசு ஊழி என நிர்ணயித்தால், ஏற்கனவே அதன் உயிரிகளை கண்டறிந்திருக்க வேண்டும். அதன்பின்னர், இன்னும் அதிகளவில் அகிலம் முழுக்க உயிரினங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.

நல்வாய்ப்பாக, இதற்கான விடையை அறிய நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. கடந்த ஆண்டில், இன்செலடசுவில் இருக்கும் பெருங்கடலுக்கும் அதன் முதன்மையான பாறைகளுக்கும் இடையில் ஏற்பட்ட வேதியியல் எதிர்வினைகளின் விளைவாக அங்குள்ள நுண்ணியிரிகளுக்கு போதுமான ஆற்றல் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த எதிர்வினைகளிலிருந்து வெளிப்பட்ட ஹைட்ரஜன் மூலக்கூறுகளை அந்தக் கோளின் புகைத்திரைகளுக்குள் கண்டறியமுடியும் என்றும் ஆய்வகச் சோதனைகள் ஊகித்துரைக்கின்றன. அந்நிலவின் பயணத்தை 2015, அக்டோபர் மாதத்தில் காசினி (Cassini) ஆய்ந்து பார்த்து அறிந்தவற்றுள் சிலவே இவை. முடிவுகள் விரைவில் வெளிவரக்கூடும்.

தமிழில் அரிஅரவேலன்

கட்டுரையாளர் குறிப்பு-தாவீது இரத்தோரி-கோள் புவியியல் பேராசிரியர், திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

https://theconversation.com/saturns-moons-may-be-younger-than-the-dinosaurs-so-could-life-really-exist-there-56860

https://minnambalam.com/k/2016/04/08/1460073602

த இண்டிபெண்டன்டின் இறுதி இதழ்

 
த இண்டிபெண்டன்டின் இறுதி இதழ்-பால் லாஸ்மர்


த இண்டிபெண்டன்ட் இதழின் அச்சுவடிவ இறுதி மலர், இங்கிலாந்தில் வாழும் அதிருப்தியடைந்த சவூதிக்காரர் ஒருவருக்கு, சவூதி அரசரைக் கொல்லும் சதியில் தொடர்பிருந்ததாகக் குற்றம்சாட்டும் வலுவான புலனாய்வுக் கட்டுரையை முதற்பக்கத்தில் வெளியிட்டு, 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விதழ் வெளிவந்ததைப் போன்ற அதே நேர்த்தியோடும், தாகத்தோடும் வெளியேறுகிறது.

ஒரு டிராம் நிலையத்தில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றிலிருந்து பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரப் பயணிகள் அவசரமாக முந்திக்கொண்டு பின்வாங்கும் காட்சியை வலுவான ஒளிப்படமாக, தனது இறுதி முதற்பக்கத்தில் வெளியிட்டு, அதை மறக்கமுடியாத ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது. அவ்வாரம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய பயங்கரவாதத்தின் கடுமையான மனநிலையை அந்த ஒளிப்படம் கச்சிதமாகப் பிரதிபலித்தது. மற்ற இதழ்கள் நிகழ்விடத்தில் காயம்பட்ட பயங்கரவாதத்தின் சந்தேகத்தை படம்பிடித்துவிட்டுச் சென்றுவிட்டன. த இண்டிபெண்டன்ட்டின் தேர்வோ, உலக நிகழ்வுகளால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் விளைவைப் பற்றிய அதன் அக்கறையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

இறுதி இதழ், முக்கியமான பொதுநலம்சார்ந்த தனிநிலைக் கட்டுரைகள் பலவற்றையும் வழக்கமான முந்தையநாள் செய்திகளையும் நன்கு வெளியிட்டிருந்தது. ஆசிரியர்கள் மாநாட்டில் ஜெர்மி கார்பின் ஆற்றிய உரையானது, இதழின் அரசியல்பிரிவுத் துணையாசிரியர் நைசல் மோரிசிடமிருந்து “உழைப்பாளரின் புரட்சியை மோசமான தேர்தல் கண்டிருக்கமுடியும்” என்னும் அரசியல் ஊகத்துக்கு நேரெதிரான கூற்றோடு சேர்ந்து வந்திருந்தால் நல்ல கவனத்தைப் பெற்றிருக்கும்.

கருத்துகள்மீதான த இண்டிபெண்டன்டின் வறட்டுத்தனமற்ற அணுகுமுறை அதை எப்போதும் உயிர்ப்புடையதாகவும், வேறுபட்டதாகவும் ஆக்கிவிடுகிறது. அதன், தன் எதிரிகளைப் போன்றதன்று; அது ஒரு கருத்தைத் தழுவுவதற்குமுன்னர், நன்கு சிந்திக்கப்பட்டதாகவும், அடிக்கடி வெல்விளிக்கு உட்பட்டதாகவும் இருக்கும், அதனுடைய நிலைப்பாடு என்னவென்பதை உங்களால் ஒருபோதும் அறியமுடியாது. தனது விளக்க உரையாளர்களின் ஆதரவுப் பிரச்சாரத்தாலும் தவறான வழிநடத்தலாலும் நடைபெறும், எடுத்துக்காட்டாக கார்டியன், இதழ்களைவிட காரிபியன் நிகழ்வை (Corbyn phenomenon) இந்த இதழ் மிகவும் ஏற்றுக்கொள்கிறது. ‘தெருவில்’ எப்போதும் சிறப்பாக உள்ள த இண்டி, கார்பியன்கால மனப்பாங்கைப் பிடித்துவிட்டது.

“உண்மையைச் சொல்வது மிகவும் கடினம்” என்பதை தான் கண்டுகொண்டதாகக் கூறிய அலாஸ்டியர் காம்ப்பெல்லின் இரண்டு பக்க நேர்காணலின் தலைப்பைப் பார்த்ததும் இது, ஏப்ரல் முதல்நாள் செய்தித்தாள்தானா என நான் சரிபார்த்துக் கொண்டதை, நான் கட்டாயம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். பிளேர் காலத்தில் நிகழ்ந்த பேரழிவுக்குப்பின்னர் நேர்காணலுக்கு ஒப்புக்கொள்ள தொடர்ந்து சுத்தமாக மறுத்துவந்த காம்ப்பெல், ஒரு பெரிய நேர்காணலை வழங்கியிருப்பது வித்தியாசமான தேர்வாகும். இருந்தபோதிலும் அது குறிப்பிடத்தக்கதே.

‘காட்டுவிலங்கு’களைப் போன்று பேசுபவர் என்னும் முத்திரைகொண்ட பிளேர், த இண்டிபெண்டன்டுக்குப் பொருத்தமானவராக இருக்கவில்லை ‘ஏனென்றால் முர்டோக்கரும், டாக்கருமே இதன் உண்மையான செலுத்துநர்கள்’ என காம்ப்பெல் கூறுகிறார்.

பாட்ரிக் குக்கூபெர் வழங்கிய ‘பாக்தாத்தில் என்ன நடக்கிறது?’ என்னும் குழப்பமான செய்திகளால் எனது மன அமைதி திரும்பவந்தது. எப்போதும் வாசிக்கத்தக்க செய்திகளை வழங்கும் குக்கூபெர்ன், மிகச்சிறந்த பிரிட்டிஷ் வெளிநாட்டுச் செய்தியாளர் ஆவார். அவர் இண்டிபெண்டன்டின் புதிய இணைய இதழோடு இணைந்திருப்பது நல்வாய்ப்பாகும். மூன்றாவது பக்கத்தில், இண்டிபெண்டன்ட் இதழின் நிறுவுகை ஆசிரிய ஆன்ட்ரூஸ் விட்மன் ஸ்மித், “கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்பட்ட அச்சுப்பதிப்பை சாத்தியமற்றதாக ஆக்கியிருக்கும் தொழில்நுட்பம், எங்களை நாங்களே நிலைநிறுத்திக்கொள்ளும் ஆற்றலை வழங்கியிருக்கிறது” என அவ்விதழுக்கான அச்சுப்பதிப்புக்கான அபாயகரமான பிரச்னையை சுருக்கமாகத் தொகுத்துரைத்து இருக்கிறார்.

அழகின் கூறு

செய்தித்தாளைத் திருப்பும்போது, அச்சுப்பதிப்பின் அழிவில் தற்போதைய இணையத் தலைமுறை எதை இழக்கிறது என்னும் சிந்தனை என்னைத் தாக்கியது. இதுவே இறுதி அச்சுப்பதிப்பு என்பதனால், இது வலிமையான ஒளிப்படங்களும், வியப்பூட்டும் அச்சுக்கலையும் கொண்டதாக அழகிய கைத்திறனோடு நேர்த்தியாகவும், தூய்மையாகவும் வடிவமைக்கப்பட்டு அழகுணர்வில் மிகச்சிறந்ததாக இருக்க வேண்டும் என்று அதன் நிறுவனர்கள் ஆணையிட்டனர்.

எரிக் கில்லின் அச்சுக்கலை வளர்ந்துவந்திருந்த, இணையத்துக்கு முந்தைய தலைமுறையைச்சேர்ந்த நான், அச்சு வரைகலையின் தூய்மையான அழகையும் வெள்ளைத்தாளோடு உள்ள உறவின் நெருக்கத்தையும் அறிவதற்காக வாய்ப்பு தற்போதைய தலைமுறையினருக்குக் கிடைத்திருந்தால் வியப்படைவேன்.

1998ம் ஆண்டின் கோடைக்காலத்தில், த இண்டிபெண்டன்ட் இதழின் ஆசிரியர் சைமன் கெல்னர், அவ்விதழில் புலனாய்வு இதழாளராகப் பணியாற்ற வருமாறு, எனக்கு விடுத்த தொலைபேசி அழைப்பிலிருந்து அவ்விதழுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளின் இதழாளனாகவும், தொலைக்காட்சித் தயாரிப்பாளனாகவும் இருந்த எனக்கு, அந்த அழைப்பு, நாள்தோறும் தீப்பிடித்தாற் போன்ற வேலைக்கான ஞானக்குளியலாக இருந்தது. முதல்நாளில் ஒரு மணி நேரத்தில் 1000 சொற்களை விரைந்து எழுதியிருந்தது; எழுதினேன். அடுத்த மூன்று ஆண்டுகள், நான் புலானாய்வையும், பிறவற்றையும் பற்றி எழுதினேன். அது கடுமையான குத்து. ஆனால் ஊழலையும், மெத்தனத்தையும் எங்கள் வலிமையையும் மீறி, மடிமீதேறி விளையாடும் செல்லநாயைப் போலன்றி காவல்நாயாக கடித்துக் குதறினோம்.

2001ம் ஆண்டில் என் குடும்பத்தோடு இலண்டனிலிருந்து வெளியேறுவதற்காக நான் பதவி விலகினேன். ஆனால், பல மாதங்களுக்குப் பின்னர், 9/11 நிகழ்வையடுத்து அப்போதைய துணை ஆசிரியர் மைக்கேல் வில்லியம்சால் த இண்டிபெண்டன்ட் இதழில் ஞாயிற்றுக்கிழமைகளில் உதவுவதற்காக அழைக்கப்பட்டேன். இரு இதழ்களிலும் நான் பணியாற்றியபோது நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதினேன். நிதிப் பற்றாக்குறையுடைய ஞாயிற்றுக்கிழமை பதிப்புடனான எனது ஒப்பந்தம் 2007ம் ஆண்டு வரை நீடித்தது. அந்த ஒப்பந்தத்தை நான் நிறைவுசெய்யும்போது அதற்காக எழுதியதைவிட அதிகமாக அதற்கு தாள் வழங்குவதன்வழியாக சம்பாதித்திருக்கலாம். நானும், எனது கல்விப் பணியை மேம்படுத்துவதில் கவனம்செலுத்த விரும்பினேன்.

வளர்ந்த இதழியல்
த இண்டிபெண்டன்ட் இதழ்கள் இனிமையும், எளிய வேலையும் கொண்டவையன்று. பணத்திற்கு அப்பால் அதற்கேயுரிய பலவீனங்களையும் அது கொண்டிருந்தது. நான் பணியாற்றிய காலத்தில், தொலைநோக்குடைய தலைமைத்துவம், அறிவுச்சால்பு அல்லது கார்டியன் இதழுக்கு ஆலன் ரஸ்பிரிட்ஜர் வழங்கியதைப் போன்ற பொது உருவம் ஆகியவற்றை அவ்விதழ் கொண்டிருக்கவில்லை. மிக அண்மைக்காலம் வரை செய்தி ஒலிபரப்பிலோ, வேறெங்குமோ இண்டிபெண்டன்ட் ஆசிரியரின் கூற்றை மிக அரிதாகவே கேட்டிருப்பீர்கள். சிலவேளைகளில், குடும்ப அல்லது சமூகத் தொடர்புகளின் அடிப்படையில் வேலையமர்த்தங்கள் நிகழ்ந்ததாகத் தோன்றியதால், நல்ல தகுதியுடைய பணியாளர்கள் மிகவும் விரக்தியடைந்தார்கள்.

த இண்டிபெண்டன்ட் தன் வாசகர்களை மதிப்போடு நடத்தியது. அவர்களை நுண்ணறிவுடைய, பக்குவப்பட்ட தனது விவாதங்களாலும், வாதங்களாலும் மட்டுமே ஈர்க்கமுடியும் எனக் கருதியது. இவ்வணுகுமுறை, தன் வாசகர்களின் மோசமான தப்பெண்ணங்களுக்கு வெற்றுத்தீனி போடுகிற அதனுடைய போட்டியாளர்களிடமிருந்து வேறுபட்டிருந்தது. த இண்டிபெண்டன்ட் வாசகர்கள் எதை விரும்பினார்களோ துல்லியமாக அதையே த இண்டிபெண்டன்ட்டும் விரும்பியது. இம்மரபை அதன் வலைத்தள வரைவும் பின்பற்றும் என நம்புவோம்.

வரலாற்றுணர்வும், சகிப்புத்தன்மையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் முன்னெப்போதைக் காட்டிலும் இக்காலகட்டத்தில் மிகவும் தேவைப்படுகின்றன. ஆனால், இவை தற்போதைய பல இதழ்களில் இவை இல்லை என்பது கவலையளிக்கிறது.

https://theconversation.com/the-independents-final-edition-summed-up-all-that-is-powerful-about-newsprint-56874

தமிழில்: அரிஅரவேலன்

கட்டுரையாளர் குறிப்பு- பால் லாஸ்மர்,இதழியல் முதுநிலை விரிவுரையாளர், சசெக்சு பல்கலைக்கழகம்.

https://minnambalam.com/k/2016/04/07/1459987203

நிறவெறி: ஆன்ட்ரூ சாக்சனைப் பின்பற்றும் டொனால்டு டிரம்ப்

ஆன்ட்ரு சாக்சன்
2016 நவம்பர் 8ஆம் நாள் நடைபெற இருக்கும் அமெரிக்க குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி (Republican Party) சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் இருக்கும் டொனால்டு டிரம்ப் அக்கட்சிக்கே திகிலூட்டுபவராக இருக்கிறார். பீதியூட்டுகிற, பாதுகாப்பைக் குலைக்கும் தொனியிலான அவரது உரைகளைக் கேட்கும் நீங்கள், ‘இதற்கு முன்னர் இதுபோல எப்பொழுதும் நடந்திருக்காது’ என எண்ணியிருக்கக் கூடும்.  ஆனால்,  அது உண்மை அன்று.
            முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வேட்பாளர் நியமனத்தை நோக்கி டொனால்டு டிரம்ப் செல்கிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால்,  1829ஆம் ஆண்டு முதல் 1837ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 7ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவரும் 20 டாலர் பிரேரணையில் சர்ச்சைக்குரிய முகத்தைக்கொண்டு இருந்தவருமான ஆன்ட்ரு சாக்சனின்  கடந்துசென்ற வாழ்க்கையோடு டிரம்ப்பின் வாழ்க்கை ஒத்திருப்பதாக வரலாற்று எண்ணம்கொண்ட நோக்கர்கள் சிலர் கருதுகின்றனர்.
# 1: போட்டியை நோக்குக
1829ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையை சாக்சன் வெல்வதற்கு முன்னரே, அமெரிக்க நாட்டின் கட்சிகள் மாறிக்கொண்டிருந்த 1824ஆம் ஆண்டில் அவர் குடியரசுத் தலைவராக முயன்று தோற்றிருந்தார். வடகிழக்குப் பகுதியின் வணிகர்களும் கூட்டாட்சி நிர்வாக ஆதரவாளர்களான கடன் கொடுப்பவர்களும் முக்கியத்துவம் பெற்றிருந்த கூட்டாட்சியினர் (Federalists) கட்சி,  சாதாரண மக்களுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் எனக் கூறிக்கொண்ட தென்பகுதியைச் சேர்ந்த நிலவுடைமையாளர்களும் விவசாயிகளும் நிறைந்த சனநாயக – குடியரசினர் கட்சி என்னும் இரண்டு கட்சிகளையே அமைப்பு அதுவரை கொண்டிருந்தது.
            1824ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் தேர்தலில் சனநாயக – குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஐவர் போட்டியிட்டனர்; கூட்டாட்சியினர் ஒருவர் கூட போட்டியிடவில்லை.   சாக்சன் அதிகப் புகழையும் வாக்குகளையும் பெற்றிருந்தார்; ஆனால் போட்டியிட்ட ஐவரில் ஒருவர்கூட பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை.  பன்னிரண்டாவது திருத்தத்தைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் அவை (House of Representatives ) எடுத்த முடிவின் விளைவாக ஜான் குயின்சி ஆடம்ஸ் (John Quincy Adams) குடியரசுத் தலைவர் ஆனார்.
டிரம்பின் போட்டியாளரான ஹில்லரி கிளின்ட்டனுக்கும் ஆடம்ஸுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.  ஜான் குயின்சி ஆடம்ஸ், முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான் ஆட்மஸுக்கு மகன் என்றால், ஹில்லரி கிளின்டன் முன்னாள் முதல் பெண்மணி ஆவார்.  இருவரும் ஐவி லீக் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள்;  அமெரிக்க நாட்டின் செனட்டர்களாகவும் மாநிலச் செயலாளர்களாகவும் பணியாற்றியவர்கள்; தாங்கள் வாழும் காலத்தில் நிறுவப்பட்ட அரசியலமைப்பின் பிரதிநிதிகள்.

#2: கருத்தியல் மீது உள்ளுணர்வு
சாக்சன் கரோலினாவில் பிறந்தவர். அவர் தானே முயன்று கற்ற வழக்கறிஞர்; 1812ஆம் ஆண்டில் நிகழ்ந்த போரில் தேசிய கதாநாயகனாக உருவானவர்; பிரதிநிதிகள் அவைக்கு டென்னிசியிலிருந்து முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இத்தகு தகுதிகள் எவையும் டொனால்ட் டிரம்புக்குக் கிடையாது. ஆனால் சாக்சனிடமிருந்த ஒரு முக்கியமான பண்பு டிரம்பிடம் இருக்கிறது; அவர் கருத்தியலை(ideology)விட கருத்தின் (idea) பிரதிநிதியாக இருக்கிறார்.
1824ஆம் ஆண்டில் பிரதிந்திகள் அவையின் தேர்வாக ஆடம்ஸ் இருந்தார். மக்களின் விருப்பத்திற்கு எதிரான உயர்தட்டினரின் நாசவேலைக்குச் சான்றாக, சாக்சனுடைய ஆதரவாளர்கள் ‘ஊழல் பேரத்தால்’ பூசிமெழுகப்பட்டார்கள்.  1828ஆம் ஆண்டில் அதே உயர்தட்டினரை எள்ளிநகையாடி சாக்சன் குடியரசுத் தலைவராக உயர்ந்தார், தற்பொழுது வாசிங்டனுக்கு எதிராக டிரம்பு செல்வதைப் போல.
 “நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளின் பிரதிநிதியாக சாக்சன் இருந்தார்” என்கிறார் வால்டர் ஆர் மீடு (Walter R Mead) என்னும் வரலாற்றாளர்.  கூட்டாட்சி அரசாங்கத்திடம் அதிகாரமும் ஆதிக்கமும் குவிந்திருக்கின்றன; அவற்றைக் கொண்டு சமூகத்தின் நலத்தை மேம்படுத்தவும் காக்காவும் வாய்ப்புள்ள அனைத்தையும் செய்ய வேண்டும் என்னும் கருத்தே அவரது உலகப்பார்வையின் இதயமாக இருந்தது. டிரப்பு, குடியரசுக் கட்சியின் வேட்பாளராக விழைந்த போதிலும் வலிமையான மைய அரசாங்கம் வேண்டுமென வாதிடுகிறார்; பொருளாதாரம் மற்றும் நாட்டின் பாதுக்காப்பில் அதற்குரிய பங்கை வலியுறுத்துகிறார்; சாதாரண மக்களின் பாதுகாவலான தன்னைத்தானே திட்டமிட்டு முன்னிறுத்திக் காட்டுகிறார்.
மேலும், சாச்சனியர்கள்  (Jacksonians) அமெரிக்கா போரை நாடிச் செல்லக்கூடாது; ஆனால், போருக்கு அழைக்கப்பட்டால், “நிபந்தனையற்ற ஒப்படைவையும் முழுமையான வெற்றியையும்” அடைய வேண்டும் என நம்புகின்றனர்.  “ஐ.எஸ்.ஐ.எஸ். அச்சத்தின் மீது வெடிகுண்டை வீசுவேன்” என டிரம்பு கூறும்பொழுது, ஆன்ட்ரு சாக்சன் புகுத்திய பாதுகாப்பின்மை, தேசியவாதம், நாட்டுப்பற்று ஆகியவற்றைக்கொண்டு சொற்சிலம்பம் ஆடுகிறார்.

# 3 சாதாரண மக்களிடம் முறையீடு
டிரம்பும் சாக்சனும் அரசியல் நிறுவனத்திற்கு அப்பால் வாக்காளர்களின் உணர்வுகளிடம் முறையிட்டார்கள்.  ஃபோபர்ஸ் 400 நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கும் டிரம்பு, வால் ஸ்டீரிட் வங்கியினரை விமர்சிப்பதைப் போலவே ஆன்ட்ரு சாக்சன் பணக்காரராகவும் அதிகாரமுடையாகவும் இருந்தபோதிலும்,  பணக்காரர்களும் அதிகாரவர்க்கத்தினருக்கும் எதிராகச் சென்றார்.  சாக்சனின் இந்த முரண்பாடு, அவருடைய முறையீட்டிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
அமெரிக்காவின் இதயப்பகுதியில் மிகஅதிகமாக உள்ள  டிரம்பின் ஆதரவாளர்கள்,  அரசியற்சரிநிலைப் போக்கு (trend of political correctness) வெகு தொலைவிற்குச் சென்றுவிட்டது என நம்புகிறார்கள்.   கடலோர அறிவாளிகளிடம் இருந்துவந்த அழுத்தம், அவர்களது சொந்த எண்ணங்களைப் புரட்டிப்போட்டது. இதற்கு வலுவூட்டும்விதமாக, அரசியற்சரிநிலையை இழிவுபடுத்தியும் ‘ஐந்தாம் நிழற்குடைச்சாலையின் நடுவில் நின்று, வாக்காளர்களை இழக்காமல் சிலரைச் சுட’ அவரால் முடியும் என்னும் தனக்கு மிகவும் விசுவாசமான தன் ஆதாரவாளர்களின்  பாராட்டிப் பராமரித்தும் டிரம்ப் நடந்துகொள்கிறார்.
               சாக்சனின் வாக்கு வங்கியாக இருந்த, “இதுபோலச் சொல்க” என்னும் சாக்சனின் ஆளுமையையும் சமூக நல்லிணக்க அலட்சியத்தையும் பாராட்டிய உள்நாட்டு வாக்காளர்களை இவர்கள் நினைவூட்டுகிறார்கள்.  “சாக்சன் தன் முதன்மை அரசியல் எதிரியை சுடவும் தன் குடியரசுத் துணைத்தலைவரை தூக்கிலிடவும் விரும்பியபொழுதிலும் பெருமளவு பிரபல ஆதரவினைப் பெற்றிருந்தார்” என சாக்சனைப் பற்றி ஒரு மேற்கோள் உண்டு.
 
#4. நிறுவனத்தின் மீதான குற்றம்
 “இதுபோன்ற கருத்துரைகள் அரசியல் நிறுவனத்தைப் புண்படுத்தும். சாக்சனை தகுதியற்றவர், அவமரியாதைக்குரியவர், ஆத்திரக்காரர், அபயகரமானவர் என்றெல்லாம் அழைத்து அவரை தாமஸ் ஜெபர்சன் எச்சரித்தார்.  பின்னர், அரசியல் தலைவர்கள் “வாய்ப்பேச்சு வீரர்கள்” எனக் கண்டித்த சாக்சன், தனது அமைச்சரவையில் பொதுப்பணியில் அனுபவமற்ற வணிகர்களை இடம்பெறச் செய்தார்.

டொனால்ட் டிரம்பு
இதேபோன்ற உறவே தற்போதைய குடியரசுக்கட்சித் தலைவர்களுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நிலவுகிறது. அவர்கள் இவரை, அபாயகரமானவராகவும் ‘தேர்ந்தெடுக்கப்படக் கூடாதவரா’கவும் காண்கிறார்கள். டிரம்ப் சங்கடம்தரும் குடியரசுத் தலைவராக இருப்பார் என கருத்துக் கணிப்புகளின் பொதுக்கருத்தாக இருந்தபோதிலும் அவர் இன்னும் உறுதிப்பாடு உடையவராகவும் பெருகிவரும் ஆதரவாளர்களைக் கொண்டவராகவும் இருக்கிறார்.

#5: இனவாதம்
சாக்சனைப் போலவே டிரம்பும் வெள்ளையரிகளிடமே முக்கியமாக முறையிடுகிறார். வெள்ளையர்களின் வளர்ச்சியும் பாதுகாப்பும் அவரது வாகையர்களாகும். மெக்சிகனிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வருகிறவர்கள் போதைப்பொருள்களை கடத்தி வருகிறார்கள்; குற்றங்களிலும் வல்லுறவிலும்  ஈடுபடுகிறார்கள் என கு குளசு குளான் (Ku Klux Klan) தெரிவித்த கருத்தை அவர் மறுத்தார்.  வீடற்ற இசுபானியர் ஒருவரை அவரது விசிறிகள் அடித்தனர் என்பதை அவர் கேட்டது அவர்களை “உணர்ச்சிகரமானவர்கள்” என அழைத்தார். யூத குடியரசுக் கட்சியினர் சிலரைப் போல தானும் பேச்சுவார்த்தையாளர் என்பதனால் அவர்கள் தன்னைப் புரிந்துகொள்வர்கள் என்றார்.  வெள்ளை மேலாதிக்கவாதியின் பாராட்டை மறுகீச்சிட்டார். இருப்பினும் “நீங்கள் சந்தித்தவர்களிலேயே இவர்தான் மிகக்குறைவாக இனவாதம் பேசுபவர்” என்னும்  பிம்பத்தையும் தக்கவைத்துக்கொள்கிறார்.
            டிரம்பின் தற்காப்புவாதம் புரிந்துகொள்ளக் கூடியதே. ஏனென்றால், அவரது இனவாதம் தனித்தன்மை வாய்ந்தது. அவர் ஆப்பிரிக-அமெரிக்கர்களையும் லத்தினோகளையும் பிற வெள்ளையர் அல்லாதவர்களையும் துல்லியமாகக் குறிப்பிட்டு வெறுக்கவில்லை; சாச்சனைப் போலவே அவர்களது உரிமைகளை மதிக்க மறுக்கிறார்.  வெள்ளைப் பெரும்பான்மையினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வரை சிறுபான்மையினர் அவர்கள் தம் வாழ்க்கையை வாழ முடியும்.
            வரலாற்றில், சாக்சனைவிட சிறப்பாக இக்கருத்தை வேறு எந்த குடியரசுத் தலைவரும் பிரதிநிதித்துவப்படுத்தியது இல்லை. அவர், வெள்ளையர்களின் குடியிருப்பில் இருந்து வெகுதொலைவில் “இந்தியர்”களைக் குடியேற்ற வகைசெய்த இந்தியர்களை அப்புறப்படுத்தல் சட்டத்தில் கையொப்பமிட்டுவிட்டு, அதனை “அரசாங்கத்தின் இரக்கம் மிகுந்த கொள்கை” என “மகிழ்ச்சி”யோடு அறிவித்தார்.  
     
       இந்த பழங்குடியினர் தம்மளவில் அச்சுறுத்துகிறவர்கள் அல்லர், ஆனால் வெள்ளையரின் வளமைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டவர்கள். எனவேதான், சாக்சன் மிசிசிபி ஆற்றிற்கு மேற்கே பழங்குடியினரை கட்டாயமாக அப்புறப்படுத்த ஆணையிட்டார்.  அப்பொழுது 4000 செரோகியர்களும் (Cherokee) 3500 கிரிக்கியர்களும் (Creeks) மாண்டனர் எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் “கண்ணீரின் சுவடுகள்” என அறியப்படுகின்றன.
            சனநாயகக் கட்சியின் தந்தையென சாச்சனை சிலர் மதிப்பர்.  அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின் பொழுது அத்தகுதி அவருக்கு வாய்த்தது. 1824ஆம் ஆண்டில் தனது ஆதரவாளர்களின் பாதையில் அவர் சென்றார். இதனால் அவர் 1828 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கும் 1832ஆம் ஆண்டின் மறுதேர்தலுக்கும் செலுத்தப்பட்டார்.   அவர்தம் குடியரசுத் துணைத்தலைவரான மார்டின் வான் புயுரன் (Martin Van Buren, அவருக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, சனநாயகக் கட்சியினருக்கு சாதாரணர்களிடமான தங்களது முறையீடே தங்களை அதிகாரத்தில் இருத்தியிருக்கிறது எனத் தெளிவுபடுத்தியது.
            டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அரசியல் மேம்பாட்டின்  புதிய ஊழியைக் கட்டியம்கூறுபவராக எஞ்சியிருப்பார் என்பதனைக் காணலாம்.  டிரம்ப்  பெரும்பான்மையான முதன்மை வாக்குகளை வெல்வாரேயானால் வேட்பாளர்களை நியமிக்கும் விதிகளை மாற்றுதல்  அல்லது வழக்காறுகளோடு பேச்சுவார்த்தை நடத்துதல் பற்றிய பேச்சுகள் நிலவுகின்றன.  இலக்கை அடைதலின் பாதையில்  அவர் எச்சமாக இருப்பார். டிரம்ப் போட்டியில் நுழைந்த விதிகளின்படி அவர் வென்ற வேட்பாளர் நியமனத்தை அவர் மறுக்கக்கூடும்.  அவ்வாறு நிகழ்ந்தால், குடியரசுக் கட்சியினர் 1824 – 1828 காலகட்ட நிகழ்வுகளை நினைவுபடுத்திக் கொண்டு, 2020 ஆம் ஆண்டில் அவர்கள் எதனை எதிர்ப்பார்க்க வேண்டும் என்பதனை தமக்குள் தாமே வினவிக்கொள்ள வேண்டும்.
<><><><><><><><> 

அமெரிக்காவிலுள்ள எக்சஸ் பல்கலைக்கழக அரசாங்கத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் ஹின்னா யானிடெல் ரெனின்ஹர்டுட் 2016 மார்ச் 11ஆம் நாளிட்ட ‘த கான்வர்சேசன்’ இணைய இதழில் எழுதிய “ஆன்ட்ரூ சாக்சன்: டொனால்டு டிரம்பின் குடியரசுத் தலைமைக்கு முன்னோன்” கட்டுரையின் தமிழாக்கம்.



நன்றி: மின்னம்பலம்.காம் 2016 மார்ச் 16 புதன்
https://minnambalam.com/k/1458086401

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...