பேணிப் பழகுக!

பேணுவோம் பேணுவோம்
பிரியத்தோடு பேணுவோம்
எல்லாரையும் பேணுவோம்
எதிர்பார்ப்பின்றிப் பேணுவோம்

ஓடி ஆடி உழைத்துக் களைத்து
ஓய்ந்துபோன முதியோரை
தேடிச் சென்று பேசிச் சிரித்து
தேவைஅறிந்து தவிசெய்து (பேணுவோம்)

கூடிப் பேசி ஆடிப் பாடி
குதுகலித்த நண்பர்கள்
வாடிப் போயின் நாடிச் சென்று
'யாமுள்ளோம்' என்றுணர்த்திப் (பேணுவோம்)

காலம் போட்ட கணக்கின் தவறால்
ஊனமுற்ற தோழரும்
ஞாலம் வெல்ல நாளும் நாமும்
நாடிச்சென் றுதவிசெய்து (பேணுவோம்)

கொட்டும் அருவி நீரைப் போன்ற
குளர்ச்சியான குழந்தையை
தட்டிக் கொடுத்து ஊக்கி நல்ல
தளிராய் வளர்ந்துயரவே (பேணுவோம்)

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...