நாக்கு

“அடுத்த தெரு
மலையாளத்துப் பொண்ணுக மூணூம்
சுடிதார் மாட்டி
இடுப்பு வரைக்கும்
நெளிநெளியா கூந்தல
முடியாம விட்டுக்கிட்டு
தாசி போல நகர்வலம் வரதாலதான்
பருவமழ கெட்டுப்போச்சு”
என இருபதாண்டுகளுக்கு முன்னாடி
ஊரில் முணுமுணுத்த அம்மா,
தொடையை இறுக்கும் ஜீன்சு
தொளதொள டி சர்ட்
காற்றில் பறக்கும் நெளிநெளி கூந்தல் என
யமாகாவில் காதலனோடு வந்திறங்கும்
பேத்தியைப் பார்த்துப் பூரித்து
நெட்டி முறித்துக்கொண்டே சொன்னாள்…
“என் கண்ணே பட்டிடும்‌போல…”

1 comment:

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...