அடையாளம் தேடும் அடையாளங்கள்


அடையாளம் அற்று இருக்கும்
அடையாளம்
அடையாளத்தால்  மறைக்கப்படுகிறது
அடையாளத்தோடு இருக்கும்
அடையாளமும்
அடையாளத்தால் மறைக்கப்படுகிறது
ஆயினும்
அடையாளம் அற்றஅடையாளமும்
அடையாளம் உள்ள அடையாளமும்
தத்தம்
அடையாளங்களைத் தேடி அடைகின்றன
அவ்வடையாளங்கள்
தம்
அடையாளங்கள்தானா
என்னும் ஐயம் எழுகையில்
அவ்வடையாளங்களைத் துறந்து
அடையாளத்தைத் தேடி அலைகின்றன

No comments:

Post a Comment

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...