நான்

கால முனைகளுக்கிடையில்
இழுபடும் வண்டி
அடிக்கடி
நினைவுக்கூரையில்
ம்
கு
ங்
தொ
காற்றாடி
சோதனைச் செருப்புக்கடியில்
கிடந்து நசுங்கும்
பூ
உணர்வு நீரின்
கொதிநிலை காக்கும்
தெர்மாசு பிளாக்சு
எல்லையறுத்துப் பறக்கும்
பறவையின்
புத்தின ஓவியம்
புதுவிடம் தேடிவிரையும்
மலையருவி
பொருள்க் கரைகளுக்கிடையில்
அசைந்து நடக்கும்
ஆறு

No comments:

Post a Comment

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...