தமிழ்த்தாய் வணக்கம்

வானக மீன்களும் வளம்வரு கோள்களும்
       வளர்புவி மீதினில் வளம்தரு மரங்களும்
                வருவதன் முன்னர் வந்தவர் வாய்மொழியே

கானகம் அழித்தெழில் கமழ்ந்திடும் நகர்பல
      கண்டு மகிழ்ந்தவர் கடல்பல கடந்திவ்
                வுலகைக் கணக்கிடும் கப்பலர் கவின்மொழியே

மானம் துறந்துயிர் வாழ மறுத்திடும்
      மனதுடைப் பெரியவர் மதிப்புறு நாவினில்
               மாநடனம் புரிகிற மதுரை மணிமொழியே

ஞானம் பற்பல நவில்ந்திடும் சான்றோர்
      நடக்கும் வழிதனில் நடந்திடும் எங்கள்
               நாவினில் அமர்ந்து நடம்புரி தமிழ்மொழியே

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...