கோலம்




இமைப்பு வினாடித் துகள்களின் இணைப்பில்
ஆதியும் அந்தமும் அற்றுப் பிறந்த
கற்பனைக் கோடு கணிதச் சிக்கலை
அவிழ்க்க உதவும் நூற்பா களுக்குக்
கட்டுப் படாத கனவுக் குழப்பம்
சுருங்கி நீளும் விடுதலைப் படைப்பு
தானே தெளியும் ஏரண முரண்மை
மனங்களை மலர்த்தி மகிழச் செய்ய
வட்ட வடிவினில் சுருண்டு கிடக்கும்
எண்ணக் குறியீடு இயற்கை யிலிவலை
படைத்த வரையே பற்றும் தீப்பொறி

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...