நலவாழ்வு

கிழக்கு வானம் வெளுத்ததும்
    கீற்று ஒளி பூத்ததும்
வழக்கம் போல எழுந்துநாம்
   வாயை, பல்லைத் துலக்குவோம் 

நாக்கில் படியும் அழுக்கையே
    நன்கு தேய்த்து போக்குவோம்
மூக்கில் சேரும் கழிவையும்
   முழுசாய்ச் சிந்தி நீக்குவோம்       

கண்ணின் ஓரம் சேர்ந்துள்ள
   கசடைத் துடைத்து அகற்றுவோம்
கன்னம் இரண்டும் பளிச்சிட
   கழுவி முகத்தை மினுக்குவோம்    

கையைக் காலைக் கழுவுவோம்
   காதின் அழுக்கை நீக்குவோம்
கைகால் விரலின் நகங்களை
   கவன மாக வெட்டுவோம்        

நாளும் குளிக்கப் பழகுவோம்
   நன்கு முடியை வாருவோம்
தூய ஆடை உடுத்திநம்
   தோற்றம் தன்னைப் போற்றுவோம் 

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...